Home  
இதழ் 459

மார்ச் 08 2010


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Director Murugadoss
Wanted Freelancers!
Home>>சுயமுன்னேற்றம்

மனநிறைவு - ஒரு தேடல்
- காயத்ரி

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒரு வகையில் மன நிறைவை அளிக்கத்தான் செய்கிறது. அனைத்தும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது.

வாழ்க்கை கடவுள் கொடுத்ததால் இயற்கையாகவே அது அழகாகவும், எல்லாம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஆனால் பலரால் இதனை உணர முடிவதில்லை.

புதுமையான, அதே நேரத்தில் எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? “எப்போதெல்லாம் மனநிறைவு பெறுகிறீர்களோ அப்போதெல்லாம் அதை முழுமையாக உணர்ந்திடுங்கள்” என்பதே இந்த தியானத்தின் தாரக மந்திரம்.

அது எப்படி என்கிறீர்களா? உதாரணமாக, தாகம் எடுத்தால் நீர் குடிக்கிறோம். இதில் தாகத்தை மறந்து விடுங்கள். நீரை விட்டு விடுங்கள். மீதம் இருப்பதோ தாகம் தணிந்த மனநிறைவு. அதை முழுமையாக உணர்ந்திடுங்கள்.

உற்று நோக்கினால் ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை சின்னச் சின்ன விஷயங்களில் மனநிறைவு உணர்ந்திடுவீர்கள். ஆனால் மனித மனம் எப்பொழுதும் எதிர்மறையாகவே நினைக்கிறது. தனக்கு நேரும் தோல்விகளையும், ஏமாற்றங்களையும் பெரிதாக எண்ணி வருந்துகிறது. நண்பர்களுடன் உரையாடும் போதும் மகிழ்ச்சியாக இல்லாமல் வருந்திப் புலம்புகிறோம்.

துன்பமயமானது வாழ்க்கை என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் உண்மை வேறு. எதுவும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது. சிறு சிறு விஷயங்களில் கிடைக்கும் மன நிறைவை ஒதுக்காமல் முழுமையாக உணர்ந்திடுங்கள். இவ்வாறு செய்வதால் வாழ்க்கையின் மேல் நம்பிக்கை ஏற்படுவதை உணர்வீர்கள்.

உங்கள் நண்பரைக் கண்டால் மகிழ்ச்சி அடைகிறீர்களா? அதை முழுமையாக உணர்ந்திடுங்கள். “உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி” என்று நண்பரிடம் கூறுங்கள். பூவிலிருந்து வரும் நறுமணம் எங்கும் பரவுவது போல உங்களுடைய மகிழ்ச்சி, சந்தோஷம், மனநிறைவு உங்களின் வாய் வழியாக தொண்டை, இதயம் என உடல் முழுவதும் சென்று நிறைவதாக உணர்ந்திடுங்கள். மகிழ்ச்சியை முழுமையாக அனுபவியுங்கள்.

இதைத் தொடர்ச்சியாக பயிற்சி செய்து வந்தால் உலகமே புதுமையாக தெரியும். தேனீ தேன் துளிகளை சேகரிப்பது போல உங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களை சேகரித்திடுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒரு வகையில் மன நிறைவை அளிக்கத்தான் செய்கிறது. அனைத்தும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது.

காயத்ரி அவர்களின் இதர படைப்புகள். சுயமுன்னேற்றம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
 
Devika
3/9/2010 , 12:03:12 AM

 [Comment url]
காயத்ரி,
உங்கள் படைப்பு மிகுந்த மன நிறைவை தருகிறது. அருமை.
 
P.Balakrishnan
3/9/2010 , 12:28:40 PM

 [Comment url]
அனைத்தும் நாம் பார்க்கும் பார்வையில்தான் உள்ளது. உண்மைதான். தருமன் கண்களுக்கு எல்லோரும் நல்லவர்களாகவும், துரியோதனன் கண்களுக்கு எல்லோரும் கெட்டவர்களாகவும் தோன்றினராம். இதேபோல் நன்மையும் தீமையும் நம் செயல்களாலேயே விளைகின்றன. தீதும் நன்றும் பிறர் தர வாரா.
 
appayamma
3/10/2010 , 7:53:35 AM

 [Comment url]
யென்னம் பொல வல்வு.யென்னஙல் மலைந்து வசம் விசும் பொது வல்கையும்
மனம் விசும்
 
RAJESWARI
3/13/2010 , 1:23:57 AM

 [Comment url]
this is correct..bhagavadathil krishnarum " NEE EDHUVAAGA NINAIKIRAYO ADHUVAAGAVE AAGIRAI" ENDRU..NAM ENNANGALIND SEYALPADUGALDHAN
NAMMAI NALLAVARAAGAVUM THEEYAVARGALAAGAVUM URUVAKKUGIRADHU.
 
siva
5/13/2010 , 6:23:14 AM

 [Comment url]
excellent one..
 
z.a.hameed
7/21/2010 , 5:58:18 AM

 [Comment url]
அருமையான கட்டுரை
 
Shan
9/27/2010 , 8:16:18 AM

 [Comment url]
மிகவும் நன்ராக இருக்கிரது.விடமல் தொடரவும்
 
raga
10/8/2010 , 1:02:16 PM

 [Comment url]
superb
 
raga
10/8/2010 , 1:03:07 PM

 [Comment url]
superb
 
seran
1/10/2011 , 1:32:16 AM

 [Comment url]
அருமை.
 
John Sundararajan
6/9/2011 , 12:41:28 PM

 [Comment url]
Very Good message
 
Gayathri
7/20/2011 , 5:46:26 AM

 [Comment url]
thinanathukku enga time enga porumai mudhal manasu erukkanurm
 
S.Goutham
11/9/2011 , 8:33:22 AM

 [Comment url]
நல்லதொரு செய்தியை படித்த மனநிறைவு கிடைத்தது
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide