தபால்காரர் (ஜோவிடம்) : "உனக்கு வந்திருக்கும் பார்சலை கொடுக்கறதுக்காக 5 கி.மீ வந்தேன் தெரியுமா?" ஜோ : "அதுக்கு பார்சலை தபால்ல அனுப்பியிருக்கலாமே?"
*****
நண்பர் : "என்ன பண்ணிட்டிருக்க ஜோ?" ஜோ : "எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்" நண்பர் : "அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?" ஜோ : "அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்"
*****
ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம், ஜோ : "எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?" நபர் : "இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்"