என் ஆட்களுக்கு இதுவரை எந்த வசதிக் குறைவும் வைத்ததில்லை. மற்ற காண்டிராக்டர்களை விடவும் கூடுதலாய்த்தான் செய்கிறேன். இருக்க விருப்பப்பட்டால் தொடர்ந்து வேலை செய்யட்டும். இல்லாவிட்டால் எப்படி வேலையை முடிப்பது என்று எனக்குத் தெரியும்.
அப்பாவின் காதல் இன்னும் ஜீவனுடன். அரை டம்ளர் காபி அம்மாவுடன் பகிர்தல் அதன் அடையாளம் தானே!
வேதாசலம் எதிரில் வந்து நிற்பதைக் கண்டதும் மேஸ்திரியிடம் பரபரப்பு கூடியது.
"அய்யா..."
சிவராம் திரும்பிப் பார்த்தான்.
அப்பாவா? ஏன் வந்திருக்கிறார்"
"என்ன பிரச்சனை சிவா?"
"ஒன்றுமில்லையே..."
மேஸ்திரியைப் பார்த்தான். இவர் போய் ஏதாவது சொல்லி விட்டாரா?
"என் ஆட்களுக்கு இதுவரை எந்த வசதிக் குறைவும் வைத்ததில்லை. மற்ற காண்டிராக்டர்களை விடவும் கூடுதலாய்த்தான் செய்கிறேன். இருக்க விருப்பப்பட்டால் தொடர்ந்து வேலை செய்யட்டும். இல்லாவிட்டால் எப்படி வேலையை முடிப்பது என்று எனக்குத் தெரியும்."
வேதாசலத்தின் குரலில் கடுமை தெரிந்தது.
"நான் பார்த்துக் கொள்கிறேன்..."
சிவராம் குறுக்கிட்டுப் பேசினான்.
உள்ளூர சங்கடப்பட்டான். இவர் ஏன் வர வேண்டும்?
வேதாசலம் சிவராமை அலட்சியம் செய்து, ஆட்களையே பார்த்தார்.
"என்ன சொல்றீங்க... இப்படியே இந்த நிமிஷத்தோட நிக்கிறவங்க நின்னுரலாம். இன்றைய தேதிக்கும் சம்பளத்தை வாங்கிக்கிட்டு போயிருங்க."