கணினி உபயோகிக்கும் போது உங்களின் ஃபோனையும் USB port- ல் சார்ஜ் செய்யுங்கள். இதன் மூலம் கணினியின் PSU மூலம் வீணாகும் மின்சாரத்தை சேமிக்கலாம்.
கணினி:
• பொதுவாக கணினி தன் இயக்கத்திற்கு அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை. கணினித் திரையே அதிக மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுகிறது. பாட்டுப் பிரியர்கள் மணிக்கணக்கில் மல்டிமீடியா கணினியில் பாட்டு கேட்டுக் கொண்டே தூங்குவதற்கு பதில் கணினித் தி¨ரையை மட்டும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டோ,10 நிமிடத்திற்கு கணினி பயன்படுத்தப்படவில்லையெனில் தானே நின்று விடுமாறு அமைத்துக் கொள்ளலாம்.
• நீங்கள் கணினியை ஒரு நாளைக்கு ஓரிரு மணி நேரமே பயன்படுத்துகிறீர்கள் என்றால் UPSக்குப் போகும் மின்னிணைப்பை இரவு முழுவதும் நிறுத்தி வைக்கலாம். UPS மட்டும் ஒரு மணி நேரத்திற்கு 9 -15 வாட்ஸ் மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.
• எங்கேல்லாம் LCD திரையைப் பயன்படுத்த முடியுமோ அதைப் பயன்படுத்தி CRT(Cathode Ray Tubes) பயன்பாட்டைக் குறையுங்கள். கேம்ஸ் ஆர்வம் இல்லாதவர்கள் கிராபிக்ஸ் கார்டை கணினியில் பொருத்துவதைத் தவிருங்கள். குறிப்பாக திரவம் மூலம் குளிரூட்டப்படும் கணினியைத் தவிருங்கள்.
• கணினி stand by ல் இருக்கும் போது பயன்படுத்தப்படவில்லை எனில் automatic shut down முறையை செட் பண்ணுங்கள்.
• இரவு நேரங்களில் பெரிய ஃபைல்களை தரவிறக்கம் செய்யும் போது கணினித் திரையை மட்டும் turn-off செய்யுங்கள்.
• மடிக் கணினியின் பின்புற வெளிச்சத்தின் luminance அளவைக் குறைத்து வைப்பதால் மின்னாற்றல் சேமிக்கப்படும்.
• வயர்லெஸ் நெட்வொர்க் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் மட்டும் ஆன் செய்து மற்ற நேரங்களில் turn-off செய்து வையுங்கள்.
• ஒவ்வொரு முறை நீங்கள் மடிக்கணினியை சார்ஜ் செய்யும் போதும் உங்களின் AC Power card தொடக்கத்திலிருந்து சார்ஜ் ஆகும். சார்ஜ் முழுவதும் முடிந்தபிறகு கணினியை சார்ஜ் செய்யுங்கள்.
• கிராஃபிக்ஸ் மூலம் அதிகளவில் கேம்ஸ் விளையாடுவதில்லையெனில் டூல்ஸ் மூலம் integrated graphics முறையை பயன்படுத்துங்கள்.
• Power options - ல் balanced mode பயன்படுத்துவதால் processor வேலைத்திறன் அதிகரிக்கும்.
• உங்களின் மடிக்கணினியை வெப்பமற்ற பகுதியில் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். முறையற்ற வெப்பம் மூலம் கணினியின் குளிரூட்டும் விசிறி அதிகம் சுற்றுவதால் அதிக ஆற்றல் செலவாகும்.
செல்லிடப்பேசி:
• செல்போன் சார்ஜர் ஒரு மணி நேரத்திற்கு 3 வாட்ஸ் மின்சாரத்தை பிளக்கில் இணைக்கப்பட்டுள்ளபோது பயன்படுத்தும். நடைமுறையில் செல் சார்ஜ் ஆகிவிட்டாலும் நாம் அதன் மின்னிணைப்பை நிறுத்துவதில்லை. அதை தவிர்ப்பதால் 3 வாட்ஸ் மின்சாரம் சேமிக்கப்படும்
• செல்போனை வீட்டில் சார்ஜ் செய்வதற்கு பதில் முடிந்தளவு உங்களின் காரிலேயே சார்ஜ் செய்யுங்கள்.
• இரவு முழுவதும் செல்போனை சார்ஜ் செய்வதால் ஃபோனிற்கும் கேடு, போனஸாய் மின்சாரமும் வீணாகும். எனவே அதைத் தவிருங்கள்.
கணினி உபயோகிக்கும் போது உங்களின் ஃபோனையும் USB port- ல் சார்ஜ் செய்யுங்கள். இதன் மூலம் கணினியின் PSU மூலம் வீணாகும் மின்சாரத்தை சேமிக்கலாம்.
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X