உலகத் தமிழர்களுக்கு ஜாதகப்பலன்களை சீரிய முறையில் கணித்து வழங்கி வரும் சித்தாந்த நன்மணி ஜோதிடர்
திருமதி.காயத்ரி பாலசுப்பிரமணியன் அவர்கள், சில வருடங்களாக நிலாச்சாரல் வாசகர்களின் கேள்விகளுக்கு இலவசமாகப் பதிலளித்து வருகிறார். ஆனால் வந்து குவியும் கேள்விகள் அனைத்துக்கும் இலவசமாகப் பதிலளிப்பதென்பது இயலாத காரியம் ஆதலாலும் விரைவாக வாசகர்கள் பதில்களைப் பெறும் பொருட்டும் கட்டண சேவையை அறிமுகப் படுத்துகிறோம்.
இச்சேவையின் மூலம் 11.99 USD (ஆன்லைனில் பணம் செலுத்த வசதியில்லாதவர்கள் கீழே
உள்ள படிவத்தின் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளவும்) பணம் செலுத்தி, உங்கள் எதிர்காலம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்குரிய பதில்களை விளக்கமாகவும், விரைவாகவும் பெறலாம்.
அதிகபட்சமாக ஐந்து கேள்விகளுக்கு அனுமதி உண்டு.
பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம். மேலும் ஒரே கேள்வியிலேயே, இரண்டு மூன்று விஷயங்களை அடுக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
பொதுவான கேள்விகளுக்கு உதாரணம் :
1. எனது எதிர்காலம் பற்றிச்சொல்லுங்கள்?
2. எனது திருமண வாழ்க்கையைப் பற்றி விளக்குங்கள்?
3. எனது குடும்பத்தார் எப்போது மேன்மை அடைவர்?
குறிப்பான கேள்விகளுக்கு உதாரணம் :
1. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்?
2. திருமண யோகம் எப்போது அமையும்?
3. தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த வியாபாரம் ஆரம்பிக்கலாமா?
4. வெளிநாட்டில் வேலை கிடைக்குமா?
5. சீரான வருமானம் கிடைக்க என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
உங்கள் ஜாதக அடிப்படையிலான ஜோதிடக் கணிப்பு, நீங்கள் பணம் செலுத்திய இரண்டு வாரங்களுக்குள் PDF கோப்பு வடிவில் உங்கள் மின்னஞ்சல் பெட்டியிலேயே கிடைக்கப்பெறுவீர்கள். இந்தக் கோப்பு தமிழில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் அனுப்பவேண்டிய விபரங்கள் :
1. உங்கள் பெயர்
2. பிறந்த தேதி
3. பிறந்த நேரம்
4. பிறந்த ஊர்
5. உங்கள் மின்னஞ்சல் முகவரி
மேற்கூறிய அனைத்து விபரங்களும் மிகவும் அவசியம், மேலும் அவை மிகச் சரியான விபரங்களாக இருக்கவேண்டும். முழு விபரங்கள் இல்லாத கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாது. கேள்விகளையும், உங்களைப் பற்றிய விபரங்களையும் பின்வரும் படிவத்தில் நிரப்பி அனுப்பவும்.
கட்டணம் செலுத்தி இந்த சேவையைப் பெற கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
Disclaimer : ஜோதிட ஆலோசனை என்பது ஒரு வழிகாட்டல் மட்டுமே. இதைப் பயன்படுத்தும் வாசகர்கள் தங்கள் நலனுக்கு தாங்களே முழு பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். ஜோதிடக் கணிப்பின் துல்லியத்திற்கு எவ்வித உத்திரவாதமும் வழங்கப்படமாட்டாது. இந்தக் கட்டண சேவையை மனம் விரும்பி பயன்படுத்துவதன் மூலம் வாசகர்கள் தங்களுக்கு நேரும் துரதிர்ஷ்டங்களுக்கோ, இழப்புகளுக்கோ நிலாச்சாரலையோ அல்லது தொடர்புடைய ஜோதிடரையோ குறிப்பிட மாட்டார்கள் என்று உறுதியளிக்கிறார்கள்.
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X