View Cart “மலையிலே… மலையிலே” has been added to your cart.
55_mayil-pola

$4

பாட்டி குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் தூங்குவதற்கு முன்பு நீதியினைக் குறிக்கும் கதைகளைச் சொல்கிறாள். குழந்தைகள் அன்றைய நீதியைப் புரிந்து கொள்கின்றனர். புவனா, சந்தர் இரு குழந்தைகளும் பாட்டியிடம் கதையின் போக்கில் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான படிப்பினையினை இயல்பாக அளிக்கின்றன. கதைகள் குழந்தைகள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிதான வார்த்தைப் பிரயோகத்தால் பின்னப்பட்டுள்ளன. கதைகளினிடையே பாடல்களும் அமைந்திருப்பது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.இப்படிப்பட்ட பாட்டிகள் அரிதான இன்றைய சூழலில் இது போன்ற கதைகள் அவசியம் தேவை. பேராசை கூடாது, பொய் கூறக்கூடாது, இரவல் வாங்கக் கூடாது போன்ற தேவையான நீதிகளைக் கதையின் போக்கில் சொல்கையில் இடையிடையே கேள்விகள் கேட்டு குழந்தைகளுக்கும் நமக்கும் கதை கேட்கும் ஆர்வத்தை வளர்த்து விடுகிறார் பாட்டி. குழந்தைகளும் கதையின் போக்கினைச் சரியாகப் புரிந்துகொண்டு சமர்த்தாக நடந்து கொள்கின்றன. பாட்டி சொல்லும் கதைகளும் இன்றைய குழந்தைகளின் மனநிலைத் தேவைக்கேற்ப அமைந்துள்ளன. அறிவுரை என்று தோன்றாத அளவில் நாமும் சேர்ந்து கதைகேட்கும் அனுபவமாகவே நடை இழுத்துச் செல்கிறது கதையுலகுக்குள். பாட்டியின் பத்து கதைகள் அடங்கியிள்ள “மயில் போல” குழந்தைகளுக்கான கதைகள் மட்டுமல்ல. பெரியவர்களுக்கான படிப்பினையும்கூட.

Quantity

SKU: 2904c54823a0.

Product Description

A grand mother tells her grandchildren moral stories every night before they sleep. The children understand the moral of the day. The morals the children Bhuvana and Chandar learn from their grandma stand in good stead in dealing with their day to day affairs. Stories have been woven with easy words that can be understood very easily. Some songs that are included here and there add interest. While such tribe of grandmas is on the wane today, these stories are quite necessary. That we should not be avaricious, should not utter falsehood, should not get anything free from others etc. are taught in the course of storytelling and they evoke anxious queries from the listeners. This makes the readers also evince greater interest in such stories. Children understand the spirit and behave very well. They are in tune with the current trends in the minds of the children. We do not treat them as advices but take them as our experiences along with the tales. This book “mayil pola” consisting of ten stories of the grandma are not meant for children alone; elders also gat a few lessons. (பாட்டி குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் தூங்குவதற்கு முன்பு நீதியினைக் குறிக்கும் கதைகளைச் சொல்கிறாள். குழந்தைகள் அன்றைய நீதியைப் புரிந்து கொள்கின்றனர். புவனா, சந்தர் இரு குழந்தைகளும் பாட்டியிடம் கதையின் போக்கில் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான படிப்பினையினை இயல்பாக அளிக்கின்றன. கதைகள் குழந்தைகள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிதான வார்த்தைப் பிரயோகத்தால் பின்னப்பட்டுள்ளன. கதைகளினிடையே பாடல்களும் அமைந்திருப்பது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.இப்படிப்பட்ட பாட்டிகள் அரிதான இன்றைய சூழலில் இது போன்ற கதைகள் அவசியம் தேவை. பேராசை கூடாது, பொய் கூறக்கூடாது, இரவல் வாங்கக் கூடாது போன்ற தேவையான நீதிகளைக் கதையின் போக்கில் சொல்கையில் இடையிடையே கேள்விகள் கேட்டு குழந்தைகளுக்கும் நமக்கும் கதை கேட்கும் ஆர்வத்தை வளர்த்து விடுகிறார் பாட்டி. குழந்தைகளும் கதையின் போக்கினைச் சரியாகப் புரிந்துகொண்டு சமர்த்தாக நடந்து கொள்கின்றன. பாட்டி சொல்லும் கதைகளும் இன்றைய குழந்தைகளின் மனநிலைத் தேவைக்கேற்ப அமைந்துள்ளன. அறிவுரை என்று தோன்றாத அளவில் நாமும் சேர்ந்து கதைகேட்கும் அனுபவமாகவே நடை இழுத்துச் செல்கிறது கதையுலகுக்குள். பாட்டியின் பத்து கதைகள் அடங்கியிள்ள “மயில் போல” குழந்தைகளுக்கான கதைகள் மட்டுமல்ல. பெரியவர்களுக்கான படிப்பினையும்கூட.)

Additional Information

ebookauthor

P.நடராஜன்