பாபா பதில்கள் – சாமி பாட்டு கேட்டால் ஆவேசம் வருகிறதே அது உண்மையா?

சில பேருக்கு சாமி பாட்டு எல்லாம் கேட்டால் ஆவேசம் வருகிறதே அது உண்மையா?

மூன்று நிலைகள் இருக்கின்றன. நீங்கள் சிந்துபைரவி சினிமா பார்த்திருப்பீர்கள். அதில் ஜனகராஜுக்கு சிவகுமாரிடம் நேரடியாக பேசுவதற்கு பயம். அதனால் தண்ணி போட்ட மாதிரி வந்து ஆக்டிங் கொடுத்துவிட்டு தான் சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்லிவிடுவார். சாமியாடுவதில் ஒரு நிலை அது. ஒரு மனைவிக்கு கணவனிடம் நேரடியாக சொல்வதற்கு தைரியம் இருக்காது. அதனால் சாமி வந்த மாதிரி நடித்து, ‘டேய்! உன் மனைவியை கொடுமைப்படுத்துகிறாயா?’ என்பார் (சிரிப்பு). இது ஒருவிதமான மனோதத்துவ உத்தி.

இரண்டாவது – சில பேருக்கு கொஞ்சம் nervous disorderஇருக்கும். அவங்களுக்கு உடுக்கை சத்தங்கள் மாதிரி கேட்கிற போது ஏற்கனவே அவர்களுக்கு nervous disorder stress இருப்பதினால் அவர்களுடைய நரம்புகளில் அதிர்வுகளை உண்டாக்குகிற போது அவர்களிடம் இந்த மாதிரியான வெளிப்பாடுகள் வரலாம். அதை Hysterical behaviour என்று சொல்வது உண்டு.

மூன்றாவது நிஜமாகவே அவர்கள் உடம்பில் particular shock மாதிரி வந்து, அவர்கள் உடம்பில் இருக்கிற எனர்ஜியில் ஏதோ ஒரு சக்கரம் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

கடவுள் என்பது வெளியில் இருக்கிற மாதிரி நம்மிடமும் இருக்கிறது. நம்முடைய மூக்கில் வருவதுதான் வாயு. நம் உடலில் இருக்கிற நெருப்புதான் அக்னி பகவான். நம் உடம்பில் இருக்கிற தண்ணீர்தான் வருணன். நம்முடைய மனதுதான் சந்திரன். நம்முடைய இருதயம்தான் முருகன். நெற்றி இருக்கிறதே அதுதான் சூரியன். வலது கைதான் இந்திரன். நம்முடைய பாதங்கள் தான் விஷ்ணு.

வெளியில் இருக்கிற எல்லா சாமியும் நம் உடலிலும் இருக்கிறது. யாராவது ஒரு disciplined lifeல் இருக்கிற போது அல்லது இதற்கு முன் பிறவிகளில் செய்த தவம் வெளிப்படுகிறபோது, அவர்கள் உடம்பில் இருக்கிற ஏதோ ஒரு எனர்ஜி, எந்த எனர்ஜியாக வேண்டுமானாலும் இருக்கலாம். சில பேரிடம் முருகன் இருக்கும். சில பேரிடம் சக்தி இருக்கும். அது வெளிப்படும். வெளிப்படுகிறபோது எப்படி வெளிப்படும் என்றால் இதற்கு முன்னால் அவர்கள் பாம்பாக இருந்திருந்தார்கள் என்று வைத்துக் கொள்; அப்போது அவர்கள் நடந்து கொள்ளும் முறை எல்லாம் பார்த்தீங்கன்னா பாம்பு மாதிரி செய்வார்கள். அதைப் போன்றே கை எல்லாம் வைத்துக் கொள்வார்கள். சில பேர் முருகனை ரொம்ப கும்பிட்டிருந்தால் அவர்கள் உடம்பில் இருந்து வருகிற, கிரியாஸ் என்று சொல்வது அந்த எனர்ஜி outlet, அது மயில் கத்துகிற மாதிரி வரும். சில பேர் சிவனை பூஜை செய்திருந்தார்களானால் புலி உறுமுகிற மாதிரி வரும். சிங்கம் கர்ஜிக்கிற மாதிரி வரும். அவர்களிடம் எந்த மாதிரி sound beat வருகிறதோ அதற்கான எனர்ஜி click ஆகி இருக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ளலாம். சில பேருக்கு காகம் கரைகிற மாதிரி வரும். அப்போது saturn energy வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

நம் உடம்பிலும் 9 கிரகங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஓட்டைகள் வழியாக அந்த ஒன்பது கிரகங்கள் வேலை செய்கின்றன. அதில் எந்த கிரகம் வெளிப்படுகிறதோ அதனுடைய energy format behavioural pattern பார்த்து, அது நிஜமா பொய்யா என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மூன்று நிலைகளிலும் வரும்.

About The Author