நோக்கு
விஷக்கடி பட்டவன்
தான் ஏந்திய விஷத்தை
எப்போதும்
தெளித்தபடியிருக்கிறான்
தன்னைச் சுற்றிலும்-
தன் சூழலையும்
தன் வசமாக்கி
மாள விட்டுவிட்டு
அதே சூழலை
என்றாவதொருநாள்
ளும் அரிப்புடன்.
ஒருமை
சுழியரு கருவட்டம்
அதனுரு நீயே!
ஒன்றொரு ஊன்றுகோல்
அதனுரு நானே!
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை:
எப்போதும்
ஒன்று வளைந்தால் சுழி
சுழி நிமிந்தால் ஒன்று:
தலின்-
நீ சுழியெனில்
நானும் சுழி!
நீ ஒன்றெனில்
நானும் ஒன்று!
மிச்சம்
நிப்பாட்டு நிப்பாட்டென
வீதிகளில்
விடாமல் கத்தித் திரிந்து
கல்லடிபட்ட பித்தனொருவன்
எதைச் சொன்னான் நிப்பாட்ட?
என் தீரா உளறல்களை?
அல்லது பிதற்றல்களை?
எல்லாத்தையும் நான்
நிப்பாட்டிவிட்டால்
என்னதான் மிஞ்சும்-
ஏதுமற்ற என்
இருளைத் தவிர?
*******