அதிரூபவதிக்கு (1)

சொற்களில்
அடங்காததால்
எனக்குள்ளேயே
அடங்கிப்போகின்றன…
உன்னைப் பற்றிய கவிதைகள்

****

மீள முடியாமலும்
மாள முடியாமலும்
தவிக்கும்
சொர்க்கம்……..
காதல்

****

இளமை துள்ளும் வரை
வாழ்க்கை வெல்லும் வரை
உன் மேல் கொண்ட காதல்
எனைக் கொல்லும் வரை……….

****

மாமதயானையைக் கூட
மன்மதபூனையாக
மற்றும்
தந்திரமல்ல
தூயமந்திரம்….
காதல்

****

About The Author