அதீதாவுக்கு

5.

விரித்தே கிடக்குது
உனக்கான பாய்-
நீயிங்கு
இல்லையென்றபோதும்.

6.

எங்கிருந்தோ வரும் உன்
கொலுசொலி
ஆட்டிப்பார்க்குதென்
கோட்டையை.

7.

நீரூற்றி ஆற்றிவிடு
என் ஊழித்தீயை
நான் நீர்த்துப்போகும்முன்.

8.

நீ கடல்
நான் சூரியன்
உன்னுள் என் மறைவு
என் ஊழித் தகிப்படங்க.

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author

1 Comment

  1. சோமா

    எங்கிருந்தோ வரும் உன் கொலுசொலி ஆட்டிப்பார்க்குதென் கோட்டையை… அனுபவமிக்க வரிகளோ…நன்றாக வந்திருக்கிறது…

Comments are closed.