ஆண்டவனே கண்ணுறங்கு (3)

எது உனக்குப் பேரென்று
எது உனக்கு முகமென்று
எது உனக்கு ஊரென்று
எது உனக்கு நாடென்று

வெட்டருவா வேல்கம்பு
பட்டப்பகல் வீதிகளில்
வெட்டித்தினம் ரத்தஆறு
பாய்ந்தோடி நிக்கையிலே

பக்திகண்ட வேதனையில்
பழகிப்போன மௌனத்தில்
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு

***

தடவைக்கொரு வேடமிட்டு
தரையிறங்கி நீயும் வந்து
ஒண்ணுஞ் செய்ய முடியாம
ஓய்ந்து போய்விட்டாயோ

இன்று நீ எவரெவர்க்கோ
ஏதேதோ ஆகிவிட்டாய்
நேற்று நீயாரென்று
அறிந்தோரும் யாரிருக்கா

நாளை நீயாரென்று
அறியலாமோ ஆண்டவனே
அன்றைக்குக் கண் விழிப்பாய்
அதுவரைக்கும் கண்ணுறங்கு

***

‘பச்சை மிளகாய் இளவரசி’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author

1 Comment

Comments are closed.