உன்னை அறியாதவளாய்…

எனக்காக விதித்த தடையை
உனக்காக உடைத்தேன்…
என் மனதை உடைப்பாய் என்பதறியாமல்!

எனக்குள் விதைத்த விதையை
உனக்காக வளர்த்தேன்…
விருட்சத்தை நீ விரும்பாததறியாமல்!

எனக்காய் நீ….
உனக்காய் நான் என்று நினைத்தேன்…
என்னைப் பகடைக்காயாக்கியதை அறியாமல்!

மாற்றம் தேடிய உன்னை…
மறக்க முடியாமல் நான்…
இரக்கம் இல்லாமல் நீ!

உதட்டோரம் புன்சிரிப்பு உன் முகத்தில்…
விழியோரம் நீர்த்துடிப்பு என் முகத்தில்…

நெருங்கி வந்ததும் ஏனோ…
விலகிச் சென்றதும் ஏனோ…
புரியாமலே இன்று வரை நான்…
என்னை அறியாமலே இன்று வரை நீ!

இது பொய்யோ?!
உன்னை அறியாதவளாய் அன்று முதல் நான்…!!!

About The Author

1 Comment

Comments are closed.