என் காதல்…

என் காதல்…
‘ஒரு’ தலையாகவே …
இருந்துவிடட்டும்
அதனால்தான்
இன்னும் சொல்லவில்லை
என் காதலை.

நீ சம்மதம்
சொல்லிவிட்டால்
‘இரு’ தலைக் காதலாம்
எல்லோரும்
சொல்கிறார்கள்;

வார்த்தையில்கூட
நாம் இருவரென்ற
பிரிவெதற்கு…

‘ஒரு’ என்ற வார்த்தைக்குள்
ஒன்றாகவே
இருந்திடுவோம்.
இனியும் சொல்லப்போவதில்லை
என் காதலை…

‘ஒரு’ தலையாகவே
இருந்துவிடட்டும்…

About The Author

11 Comments

  1. deepshika

    ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு இன்னும் எலுதுங்க நான் ரசிக்கிறென்

  2. kavignar.neerai.athippu

    இது எப்படி?
    கொடுப்பான் இறைவன் கொடுத்துக் கொடுத்து நம்
    கொள்கையின் வலிமையை எடையிடுவான் – அதில்
    கொஞ்சம் தளர்ந்து நெஞ்சம் பிறழ்ந்தால்
    கொடுக்கிற வழியிலும் தடையிடுவான்.

    கவிஞர். நீரை. அத்திப்பூ செல்: 9444446350

  3. kavignar. neerai.athippu

    மன்னிப்பு
    கண்ணைக் குத்த வருபவன் கையைக் கனிவாய் எடுத்து முத்தமிடு – அதில்
    கலந்து இருக்கும் அழுக்கைப் போக்க கண்ணீர் கொடுத்து சுத்தமிடு.

    கவிஞர். நீரை.அத்திப்பூ செல்: 9444446350

  4. kavignar neerai athippu

    புதுப்புது அர்ததம் புலப்படும் நித்தம்
    புத்தகம் படித்தால் கிட்டும் – நாம்
    விதைப்பது நன்றாய் விளைந்திட இன்றே
    விறைவோம் நூல்களின் பக்கம்.
    கவிஞர். நீரை. அத்திப்பூ செல்: 9444446350

  5. kavignar neerai athippu

    உடல் எடை எனக்கு அறுபது கிலோ தான்
    உள்ளத்தின் எடையோ இமயமலைதான்
    கவிஞர். நீரை.அத்திப்பூ

  6. kavignar neerai athippu

    நிலாச் சாரல் நெஞ்சத்தில்
    தேனைப் பாய்ச்சி
    நினைவென்னும் வயல் வெளியில்
    அன்பாம் வித்தை
    தளமுழுதும் பரப்பி விட்டு
    முளைக்க செய்யும்.
    நன்றி. கவிஞர். நீரை. அத்திப்பூ

  7. kavignar. neerai. athippu

    உலா வந்தால் உள்ளத்தில் மகிழ்ச்சி சேரும்
    உணர்வு வந்தால் உலகத்தில் புரட்சி நேரும்
    நிலா வந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி மேவும்
    நிலாச்சாரல் கருத்துக்கு விருந்தாய் மாறும்.
    நன்றி நீரை. அத்திப்பூ செல்: 9444446350

Comments are closed.