கவிதைகள்

வள்ளல் மரங்கள்!

உப்பு நீரைச் சுவை நீராக்கும்
திட்டம்
நூறு கோடி செலவென்றது
அரசாங்கம்
"ஹா" என்றதிர்ந்து சிரித்தன
தென்னை மரங்கள்!

******

கட உள்!

ஆறு படை வீடுகள் என்றனர்
ஆவலாய்ச் சென்று வந்தார்

கோள்களின் இருப்பிடங்கள் என்றனர்
கோணாமல் சென்று வந்தார்

ஒன்பது திருப்பதி என்றனர்
அன்புடன் சென்று வந்தார்

எங்குமுனைக் காணலியே
எங்கிருக்கிறாயோ என்றேத்தினார்

"சாமீ!" என்று கையேந்தினான்
கடவுளை அவரிலும் கண்ட பரதேசி!

About The Author