கவிதைகள்

பொது அறிவு

வந்தேமாதரம் பாடுங்கள்
குழந்தைகள் பாடினார்கள்
தாய் மண்ணே வணக்கம்!

தேசிய சிக்கல்

இந்த தேசத்திற்கு ஆபத்து
முழங்கிய தலைவருக்கு விக்கல்
தொண்டர்களின் ஓட்டம்
கிடைத்தது பெப்சி!

தீபாவளி

ஊரெங்கும் திருவிழா
விண்ணில் கந்தகப் பூக்கள்
என் கண்களில் வெளிச்சம்
சிவகாசிக் குழந்தைகளின்
அலுமினியக் கைகள்!

ஆன்மீகம்

பற்றற்றிரு!
சாமியார் பேச்சுக்கு
மயங்கினார்கள் பக்தர்கள்
அன்றைய கலெக்ஷன்
அரை கோடி!

About The Author

6 Comments

  1. Girijamanaalan

    தங்கள் இணைய தளத்துக்கு எனது கவிதை சமர்ப்பணம்

    முக்கனிச் சுவையோடு
    படையல்
    உதியோர் இல்லத்தில்
    மூச்சை நிறுத்திய
    அப்பாவுக்கு!
    – கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி, இந்தியா.

  2. pramman

    தெச பட்ட்ருமிக்க கவிதை அருமை. cஒன்டினுஎ ஒf ந்ரிடெஇங்.

Comments are closed.