கவின் குறு நூறு-22

67
எப்படியோ தெரியவில்லை!
மெல்ல எறும்பைத் தன்
தளிர் விரல்களால் பற்றிச்
சன்னல் வழியாக
வெளியே விடுகிறான் கவின்;
எறும்பு அவனைப் பார்த்துக் கொண்டே
கீழே போகிறது.

68
காலையில் கவினைக் குளியலறைக்கு
அழைத்துச் சென்று கைகளைக் கழுவி விட்டேன்
நண்பகல் அவன் சட்டையில் படிந்த
குழம்புக் கறையைக் கழுவிவிட்டேன்
மாலையில் குளியலறையில் அவனே
கழுவிக் கொண்டிருந்தான் எழுத்துக்கள் போக
நான் கவிதை எழுதிவைத்திருந்த காகிதங்களை.

69
விடை கிடைக்காத வினாக்களுக்கு
விளக்குகள் விடைகளைப்
பெற்றுக் கொள்கின்றன
கவின் கண்களில்.

About The Author