கவின் குறு நூறு-32

94

பத்தாவது கதை முடிவதற்குள்
பாக்கியில்லாமல் கிண்ணத்து சோறு
கவின் வயிற்றுக்குப் போயிருந்தால்
பாட்டிக்கு மகிழ்ச்சி…
பதினோராவது கதைக்கு வருத்தம்.

95

கன்னத்தில் முத்தமிட்டால்
கள்வெறி ஊறுதென்றான் பாரதி
யார் கன்னத்தில் யார் இட்டால்?
கவின் கன்னத்தில் நானா?
என் கன்னத்தில் கவினா?

96

கவின் கிறுக்க மாட்டானா என்று
கிறங்கிக் கிடக்கின்றன
தமிழ் எழுத்துக்கள்.

97

குடைராட்டினம் என்றால்
கொள்ளை ஆசை கவினுக்கு
குடைராட்டினத்துக்கும் அப்படித்தான்
அவன் கனவுக்குள் வந்து சுழல்கிறது.”

About The Author