காதல்

விழி மூடும் மெல்லிசையில்
உதட்டோரப் புன்னகையில்….
மென்மையாய் வருடிச செல்லும்
உன் நினைவுகள்…
உன்
மரணத்தோடு மடிந்து விடுவதில்லை
நம் காதல்….. என்
மரணம் தாண்டியும் அது வாழும்….
உன்னையும் என்னையும் போல்….
எத்தனையோ ஜீவன்கள்…..
நிழலையே காண முடியாத…..
நிஜங்களாய் போனாலும்…..
நினைவுகளின் உயிர் குடித்தபடி…
வாழ்வதால்தான்…..
வாழ்கிறது வாழ்வும்…
உலகும்….

About The Author