கும்பகோணம் காட்சிகள் ஜூலை 2004 (1)

மூடு பள்ளிகளை
அகற்று கீற்றுகளை
கைதுசெய் துரோகிகளை
இது என்ன பள்ளியா
அரசின் முழக்கம்

களுக்கென்று சிரிக்கிறார்
ஓர் அதிகாரி
இன்னும் எத்தினி நாளைக்கி
இந்தக் கூத்து?
*

இனி என்ன செஞ்சு
எனக்கு என்ன ஆச்சு
பாவியளா பாவியளா
எம்பிள்ளை போச்சே
கதறிக் கதறிக்
கருகிக் கருகி
மடிஞ்சே போச்சே

நாளைய துக்கம் தடுக்க
யார் சட்டையைப் பிடித்தும்
கண்ணீரா உலுக்கும்
கைகள்தானே உலுக்கும்?
*

எத்தினியோ பிள்ளைகள்
சாகாம வீட்டுக்கு வந்துட்டாங்க
விதியிருந்தா உம்பிள்ளையும்
வீடுவந்திருக்காதா?

இருநூறு கொடுத்தாப்
போலீசு விட்டுடுவான்
இரண்டாயிரம் கொடுத்தாத்
தாசில்தார் விட்டுடுவான்
இருபதாயிரம் கொடுத்தா
அடுப்பு மேடையும்
பள்ளிக்கூடம் ஆகிடாதா?
*

(தொடரும்)

‘பச்சை மிளகாய் இளவரசி’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author