நினைவிருக்கிறதா?

அன்று
நம் காதலுக்கு
3 வயது!

பரிசாய்
எது கொடுத்தாலும்
போதாது என்றாய்!

உரையாடிய இதழ்கள்
உறவாட ஆரம்பித்தன!

போதும் என்றாய்!
நினைவிருக்கிறதா?

****

கடற்கரை மணலில்

என்
பாதச்சுவடுகளில்
நீ
கால் பதித்தபடி வந்தாய்.

இடையில்
நீ
நின்று விட
‘கால் வலிக்குதா’ என்றேன்..

இல்லை இல்லை..
காதலிக்கிறேன் என்றாய்.

நினைவிருக்கிறதா ?

*****

உனைப் பார்க்க
பேருந்து நிறுத்தத்தில் நான்!

‘ஐயோ..
தோழிகள் எல்லாம் இருக்காங்க..
பார்த்துடப் போறாங்க …
போ போ என்றாய்’ பதற்றத்துடன் !

நான் செல்கையில்
நீயும்
என் பின்னாலேயே வந்துவிட்டாய்
சிறு
வெட்கத்துடன்…

நினைவிருக்கிறதா?

About The Author

20 Comments

  1. அவனி அரவிந்தன்

    என்றும் நினைவில் நிற்கும் கவிதைகள்.
    அழகு !

  2. Saranya Gangadharan

    அழகான கவிதை…:)
    இனிமையான உணர்வுகளின் இயல்பான வெளிப்பாடு…:)

  3. Priya

    உணர்வுகளையும் நினைவுகளையும் இனைத்து…ஒரு அழகான கவிதை !
    வாழ்த்துக்கள்!!!

  4. durai @ saish

    @அவனி அரவிந்தன்,DEEPSHIKA : தேங்க்ஸ் for யுவர் கமெண்ட்ஸ் :):):)

  5. sirajudeen

    எபொழுதும் அனுபவங்கள் அழகான கவிதையாகும்…
    இது ஒரு அழகான கவிதை…

  6. Dhavappudhalvan

    இந்த நினைவுகளின் வெளிப்பாடு திருமணத்திற்கு பின்பா அல்லது முன்பா? கேள்விகளாகவே இருக்கிறதே சோகமா, மகிழ்ச்சியா?

  7. durai @ satish

    🙂

    idhu verum ninaivugal dhaan 🙂 magizhchiyaana onru dhaan… adhai velippaduthum vidam satru sogamaaga irukkalaam 🙂

Comments are closed.