நெருப்பு

“நீ யார்?” எனவே வினவிற்று

நின்மல மனத்தோர் குழந்தைதன்

தாயார் உடலைக் கருக்கிடவே

தாவி உயர்ந்த தீக்கொழுந்தை,

அன்னை இவளின் வயிற்றுக்குள்

அன்றொரு நாள்நடு நிசிபொழுதில்

உன்னை உருவாக்கிட மூண்ட

உத்வேகம் எனப் பதில்கிட்டும்

About The Author