மௌனமாய் உன் முன்னே(4)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை
என்றதும்
உப்பை அள்ளி
இலையில் வைத்தாயே
நினைவிருக்கிறதா

ஓர் மழை நாளில்
மனம் மகிழ பாதம் நோக
இலக்கில்லாமல் உடன் நடந்தது
நினைவிருக்கிறதா

கடிதம் வேண்டும் என்பதால்
கல் கண்ணாடி
காய் பூ பழம் என்று
ஏதாவது எழுது என்றாயே
நினைவிருக்கிறதா

நாளை முதல் பேசாதே
என்று சொல்லிவிட்டு
கோபம் தணிந்ததும்
மென்மையாய் மிக மெதுவாய்
தினமும் நாளை வரும் என்றாயே
நினைவிருக்கிறதா

(‘மௌனமாய் உன் முன்னே’ -மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author