விரல் தொட்ட வானம் (29)

வாழ்வதற்கு
தாத்தா ஏர் பிடித்தார்
தந்தை கொடி பிடித்தார்
பேரன் காக்கா பிடிக்கிறான்!

********

யானையாய்ப் பெருத்தது
சிறு இருள்
அந்த யானையைக் கொன்றது
துளி எறும்பு!

********

துண்டு விழும்
மாத பட்ஜெட்டை
அவரிடம்
நீட்டும் ஒவ்வொரு முறையும்
மறைத்தே வைக்கிறேன்
செருப்பையும்
துடைப்பத்தையும்.

–தொட்டுத் தொடரும்..

About The Author