சோளா-சோயா கட்லெட்

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 3
வெங்காயம் – 2
காரட் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
சோளமாவு – 3 மேசைக்கரண்டி
சோயாமாவு – 3 மேசைக்கரண்டி
அரிசி மாவு – 3 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி – 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
கொத்துமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கு, காரட் இவற்றை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெயை விட்டுக் காய்ந்ததும், பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு வதக்கி அதனுடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கு, காரட், மஞ்சள், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, கொத்துமல்லி மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்குங்கள்.

பின் பாதி சோளமாவு, சோயாமாவு, அரிசி மாவு சேர்த்துக் கிளறி கெட்டியானவுடன் இறக்கிக் வைத்துக் கொள்ளவும். நன்றாக ஆறியபின் எலுமிச்சை சாறு அதில் சேர்த்து, தேவையான அளவில் கட்லெட்டுகளாக செய்து கொள்ளவும்.

பின் மீதியுள்ள சோளமாவு, சோயாமாவு, அரிசி மாவை உப்பு கலந்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். கட்லெட்டுகளாக செய்ததை மாவில் போட்டு புரட்டி எடுத்து, தோசைக் கல்லில் சிறிது எண்ணெயில் பொரித்து எடுக்க சுவையான சோளா-சோயா கட்லெட் தயார். இதை தக்காளி சாஸூடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

About The Author