இவர்களும் இராமாயணப் பாத்திரங்கள்தான்! – கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அகம்பனன் – ராவணனிடம் ராமனைப் பற்றிக் கோள் சொன்னவன். (போட்டுக் கொடுத்தவன்). ராமனின் அம்புக்குத் தப்பிப் பிழைத்த அதிசய ராட்சஸன்.

அத்திரி – பத்தினி அனுசூயாவின் கணவர். ராமதரிசனம் பெற்றவர்.

கரன், தூஷணன் – ராவணனின் தம்பிகள்; ராமன் கையால் அழிந்தவர்கள்.

கும்பன் – கும்பகர்ணன் மகன்.

குசத்வஜன் – ஜனகரின் தம்பி; மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை. பரத – சத்ருக்கனரின் மாமனார்.

சுநைனா – ஜனகரின் மனைவி; சீதையின் தாய். (ஒரு நடிகையின் பெயர் போல இருக்கிறதே!).

சதானந்தர் – அகல்யை, கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர்.

சதபலி – வடக்குத் திசையில் சீதையைத் தேடச் சென்றவன்.

சுஷேணன் – வாலியின் மாமனார்; வானர மருத்துவன், மேற்குத் திசையில் சீதையைத் தேடச் சென்றவன்.

தான்யமாலினி – ராவணனின் இளைய மனைவி. (மது மாலினிக்கு உறவா?).

நிகும்பன்
– கும்பகர்ணன் மகன்.

மால்யவான் – ராவணனின் தாய்வழிப் பாட்டன் (பேரனே இப்படி இருந்தால்…).

யுதாஜித் – கைகேயியின் தம்பி; பரதனின் தாய்மாமன்.

வினதன்
– கிழக்குத் திசையில் சீதையைத் தேடச் சென்றவன்.

மாண்டவி
– பரதன் மனைவி.

சுருதகீர்த்தி
– சத்ருக்கனன் மனைவி.

ருமை
– சுக்ரீவன் மனைவி.

விராதன் – தாண்டகவனத்தில் வசித்த அரக்கன்; ராமனால் சாபம் தீர்ந்தவன்.

*****

About The Author