நீர் வளம் காப்போம்! (3)

வீட்டிற்கு வெளியில்:

1. புல்தரைக்கு தேவைப்படும் போது மட்டும் தண்ணீர் பாய்ச்சுங்கள்.

2. கார், வீட்டின் வெளிப்புற நடை பாதையை முதலில் பெருக்கிக் குப்பைகளை அகற்றி விட்டுப் பின் நீர் பயன்படுத்தினால் குறைவான அளவே தண்ணீர் செலவாகும்.

3. மிகப்பெரிய புல்தரைகளுக்கு ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சுங்கள்.

4 செடிகளுக்குத் தேவையான அளவு நீரை அதிக நாட்கள் இடைவெளியில் தருவதால் வேர் நன்கு வளர்வதுடன், நீரும் மிச்சப்படுத்தப்படும்.

5. ஒரே அளவு நீர் தேவைப்படும் செடிகளை ஒரு குழுவாக அமைப்பதன் மூலம் தண்ணீரைச் சேமிக்கலாம்.

5. தெறிப்பது போன்ற செயற்கை நீர்விழ்ச்சியை விட சலசலத்துக் கொண்டு செல்லும் நீர்விழ்ச்சி குறைந்தளவே நீரை ஆவியாக்கும்.

6. நீரை மறுசுழற்சி செய்யும் கடைகளில் உங்களின் காரை கழுவுங்கள்.

7. உங்கள் வீட்டுப் புல்தரையின் மீது காரை நிறுத்தி கழுவுவதன் மூலம் புல்தரைக்கென தனியே நீர் பாய்ச்ச வேண்டியதில்லை.

8. செடியின் தரையை ஒட்டிய கிளைகளை வெட்டாமல் இருப்பதன் மூலம் நீர் ஆவியாவது தடுக்கப்படும். அட! அதுதாங்க உயிர் மூடாக்குன்னு விவசாயிங்க சொல்றது.

9. நிலம் நீரை உறிஞ்சும் தன்மைக்கேற்ப தண்ணீர் பாய்ச்சுங்கள்.

10. வருடத்திற்கு ஒருமுறையாவது புல்தரையை கொத்திவிட்டு களை எடுப்பதன் மூலம் நீர் மேற்பரப்பிலேயே தங்காமல் வேருக்ச் செல்லும்.

11. நிலத்திலிருந்து குறைந்த உயரம் மற்றும் சாய்வுகோணங்களிலேயே சொட்டுநீர், தெளிப்பு நீர்ப் பாசனமுறைகளை செயல்படுத்துங்கள்.

12. நடைபாதை மற்றும் வண்டிகள் செல்வதற்கான பகுதிகளில் தெளிப்புநீர் தெளிக்கப்பட்டு வீணாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

13. உங்களின் வால்வுகள், ஹோஸ் போன்றவற்றில் தனியங்கி ஆன்/ஆப் முறையை அமைப்பதன் மூலம் நாம் கவனிக்காதபோது நீர் வீணாவது தடுக்கப்படும்.

14. குழந்தைகளின் தண்ணீர் பொம்மைகளை புல்தரையின் காய்ந்த பகுதிகளில் போட்டு விளையாட விடுங்கள்.

15. மோட்டார் ஆயில், பெயிண்ட் போன்றவற்றை முறையாக மறுசுழற்சி பகுதிக்கு அப்புறப்படுத்துங்கள்.அவற்றை அப்படியே தரையில் கொட்டுவதன் மூலம் நீர் ஆதாரப் பகுதிகளை மாசுபடுத்துகிறோம்.

16. செடிகளின் இலைகளின் மேல் நீர் ஊற்றாமல் வேரிலிருந்து சற்று தள்ளி ஊற்றுங்கள்.

17. காரைக் கழுவும் போது ஹோஸ் பைப் பயன்படுத்தாமல் ஒரு பக்கெட்டில் நீர் எடுத்து ஸ்பாஞ்சால் துடையுங்கள்.

18. நீர் குறைவாக ஆவியாகும் காலை நேரத்தில் செடிகளுக்கு நீர் பாய்ச்சுங்கள்.

19. சிறிய புற்தரைகளுக்குக் கைகளால் நீரை அள்ளித் தெளியுங்கள்.

(தொடரும்)”

About The Author

2 Comments

Comments are closed.