மி‎ன்சார சிக்கனம் தேவை இக்கணம்! (4)

கணினி:

• பொதுவாக கணினி தன் இயக்கத்திற்கு அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை. கணினித் திரையே அதிக மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுகிறது. பாட்டுப் பிரியர்கள் மணிக்கணக்கில் மல்டிமீடியா கணினியில் பாட்டு கேட்டுக் கொண்டே தூங்குவதற்கு பதில் கணினித் தி¨ரையை மட்டும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டோ,10 நிமிடத்திற்கு கணினி பயன்படுத்தப்படவில்லையெனில் தானே நின்று விடுமாறு அமைத்துக் கொள்ளலாம்.

• நீங்கள் கணினியை ஒரு நாளைக்கு ஓரிரு மணி நேரமே பயன்படுத்துகிறீர்கள் என்றால் UPSக்குப் போகும் மின்னிணைப்பை இரவு முழுவதும் நிறுத்தி வைக்கலாம். UPS மட்டும் ஒரு மணி நேரத்திற்கு 9 -15 வாட்ஸ் மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.

• எங்கேல்லாம் LCD திரையைப் பயன்படுத்த முடியுமோ அதைப் பயன்படுத்தி CRT(Cathode Ray Tubes) பயன்பாட்டைக் குறையுங்கள். கேம்ஸ் ஆர்வம் இல்லாதவர்கள் கிராபிக்ஸ் கார்டை கணினியில் பொருத்துவதைத் தவிருங்கள். குறிப்பாக திரவம் மூலம் குளிரூட்டப்படும் கணினியைத் தவிருங்கள்.

• தேவையில்லாத சேமிக்கும் கருவிகளாகிய ஃபிளாப்பி, பிளாஷ் டிரைவ் போன்றவற்றை கணினியிலிருந்து எடுத்து விடுங்கள்.

• கணினி stand by ல் இருக்கும் போது பயன்படுத்தப்படவில்லை எனில் automatic shut down முறையை செட் பண்ணுங்கள்.

• இரவு நேரங்களில் பெரிய ஃபைல்களை தரவிறக்கம் செய்யும் போது கணினித் திரையை மட்டும் turn-off செய்யுங்கள்.

• மடிக் கணினியின் பின்புற வெளிச்சத்தின் luminance அளவைக் குறைத்து வைப்பதால் மின்னாற்றல் சேமிக்கப்படும்.

• வயர்லெஸ் நெட்வொர்க் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் மட்டும் ஆன் செய்து மற்ற நேரங்களில் turn-off செய்து வையுங்கள்.

• ஒவ்வொரு முறை நீங்கள் மடிக்கணினியை சார்ஜ் செய்யும் போதும் உங்களின் AC Power card தொடக்கத்திலிருந்து சார்ஜ் ஆகும். சார்ஜ் முழுவதும் முடிந்தபிறகு கணினியை சார்ஜ் செய்யுங்கள்.

• கிராஃபிக்ஸ் மூலம் அதிகளவில் கேம்ஸ் விளையாடுவதில்லையெனில் டூல்ஸ் மூலம் integrated graphics முறையை பயன்படுத்துங்கள்.

• Power options – ல் balanced mode பயன்படுத்துவதால் processor வேலைத்திறன் அதிகரிக்கும்.

• உங்களின் மடிக்கணினியை வெப்பமற்ற பகுதியில் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். முறையற்ற வெப்பம் மூலம் கணினியின் குளிரூட்டும் விசிறி அதிகம் சுற்றுவதால் அதிக ஆற்றல் செலவாகும்.

செல்லிடப்பேசி:

• செல்போன் சார்ஜர் ஒரு மணி நேரத்திற்கு 3 வாட்ஸ் மின்சாரத்தை பிளக்கில் இணைக்கப்பட்டுள்ளபோது பயன்படுத்தும். நடைமுறையில் செல் சார்ஜ் ஆகிவிட்டாலும் நாம் அதன் மின்னிணைப்பை நிறுத்துவதில்லை. அதை தவிர்ப்பதால் 3 வாட்ஸ் மின்சாரம் சேமிக்கப்படும்

• செல்போனை வீட்டில் சார்ஜ் செய்வதற்கு பதில் முடிந்தளவு உங்களின் காரிலேயே சார்ஜ் செய்யுங்கள்.

• இரவு முழுவதும் செல்போனை சார்ஜ் செய்வதால் ஃபோனிற்கும் கேடு, போனஸாய் மின்சாரமும் வீணாகும். எனவே அதைத் தவிருங்கள்.

கணினி உபயோகிக்கும் போது உங்களின் ஃபோனையும் USB port- ல் சார்ஜ் செய்யுங்கள். இதன் மூலம் கணினியின் PSU மூலம் வீணாகும் மின்சாரத்தை சேமிக்கலாம்.

(தொடரும்)

About The Author

1 Comment

  1. ரிஷி

    ஹாய் கவிதா.. நல்ல கலெக்ஷன். சரளமா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்

Comments are closed.