|
குருஜி
கார்த்திகா சித்தார்த் அவர்கள், நிலாச்சாரல்
வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு
அவர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் பதில் தர
இசைந்துள்ளார்.
பி.எச்.டி பட்டம் பெற்ற குருஜி கார்த்திகா சித்தார்த்
அவர்கள் இதுவரை 22000 மாணவர்களுக்கு ஜோதிடக் கலையைப்
பயிற்றுவித்திருக்கிறார். வேத சாஸ்திரம், பூஜை, ஹோமம்,
ரசவாதம் போன்றவற்றில் வல்லுநரான இவருக்கு மூட
நம்பிக்கைகளை ஒழித்து இறைமையை நிலைநாட்டுவதே நோக்கம்.
இவரது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி மையம் மூலம்
ஒவ்வொரு வருடமும் 5000 மாணவர்கள் ஜோதிடத்தில் பட்டம்
பெறுகிறார்கள். கார்த்திகா வித்யா பவன் ட்ரஸ்ட் என்ற
அமைப்பையும் இவர் நிறுவியுள்ளார்.
கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின்
இறுதியில் காணப்படும் படிவத்தை நிரப்புவதன் மூலம்
கேள்விகளை அனுப்பலாம். குருஜியின் பதில்கள்
'ஜோதிடம்
கேளுங்கள்' பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை
இடம் பெறும். கேள்வி கேட்கும் வாசகரின் பெயர் அல்லது
ஊர் மட்டுமே இங்கு வெளியிடப்படும். மற்ற விபரங்களை
நிலாச்சாரல் சேமித்து வைப்பதில்லை.
இந்த வாரக் கேள்விகள்:
d.Want to know my future i.e my married life and my career. Please give me the details. Thank you. - Rajeswari
இறைவனுள் அன்புடைய செள. ராஜேஸ்வரி எமது நல்லாசிகள்.
தங்களுடைய ஜாதகத்தை கணித்துப் பார்த்தோம்.
நள வருடம் வைகாசி மாதம் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 11.6.1976 காலை 6-42 மணிக்கு பிறந்த தங்களுடைய ஜன்ம நட்சத்திரம் அனுஷம். விருச்சிக ராஸி. மிதுன லக்னம். ஜனன காலத்தில் சனி தசையில் பிறந்த தங்களுக்கு தற்பொழுது 3 ஆவது தசையாக கேது தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. 11 இல் உள்ள கேது தன்னுடைய தசையையும் 2 இ ல்நின்ற சனி தன்னுடைய புக்தியையும் நடத்துகிறார்கள். தங்களுடைய ஜாதகத்தில் 2 இல் செவ்வாய் இருப்பதால் இது செவ்வாய் தோஷ ஜாதகம். 7 ஆம் இடத்து அதிபதி 11 இல் கேதுவோடு இணைந்து உள்ளார். இது திருமண வாழ்விற்கு தடையாக உள்ள அமைப்பையே விளக்குகிறது.
இவ்வாறு அமைப்புள்ள தங்களுடைய ஜாதகத்தில் ஏற்கெனவே குரு பலன் வலுவாக இருந்து திருமண வாழ்க்கையை ஏற்படுத்திச் சென்றுள்ளது. கற்ற கல்வியினால் பயன் பெறக்கூடிய தங்கள் ஜாதகத்தில் தற்பொழுதுள்ள தசா புக்தி சற்று குழப்பமான சூழ்நிலையை உருவாக்கும். இந்நிலை இன்னும் ஓராண்டு காலம் நிலவும். குரு கோட்சாரத்தில் 12 இல் விரயமாகி இருந்தாலும் தவறில்லை. வரும் அக்டோபர் மாதத்திற்கு மேல் தங்களின் குடியிருப்பு மாறும். சுகமான திருமண வாழ்வு சிறப்பாக இருக்கும். தங்களுடைய 33 வயதிற்கு மேல் நிலபுலன்கள் மேன்மையுறுவதும் புதிய வீட்டை கட்டுவது போன்ற சுப கா¡¢யங்களில் வெற்றி காண்பீர்கள். உத்யோகமும் சுய தொழிலும் அமைந்துள்ள தங்களுடைய ஜாதகத்தில் இன்னும் 3 மாத காலம் சிறப்பில்லாத காலமாக இருந்தாலும் அதற்குப் பின்னர் படிப்படியாக உயர்ந்து சிறப்பான வாழ்வைப் பெறுவீர்கள்.
தற்பொழுது தெய்வ பலம் தங்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறது. வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தூ;க்கை அம்மன் வழிபாடும், சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு அர்ச்சனையும் செய்து வாருங்கள். எல்லாம் சிறப்பாகவே நடக்கும்.
எமது நல்லாசிகள்.
d.How will be my future and family
life? - Thavamoney
இறைவனுள்; அன்புடைய செள. தவமணி, எமது நல்லாசிகள். தங்களுடைய ஜாதகத்தை கணித்துப் பார்த்தோம்.
ப ரிதாபி வருடம் வைகாசி மாதம் 11 ஆம் தேதி புதன்கிழமை, 24.5.1972 அன்று காலை 6-30 மணிக்கு பிறந்த தங்களுடைய நட்சத்திரம் சித்திரை. கன்யா ராஸி. மிதுன லக்னம் என்ற அமைப்பைக் கொண்ட தங்களுடைய ஜாதகப்படி தற்பொழுது தங்களுக்கு குரு தசை நடந்து வருகிறது. ஜனன காலத்தில் 7 இல் குரு ஆதிபத்திய தோஷத்தையும் வக்ர நிலையையும் பெற்றுள்ளதால் 40 வயது முடியும் வரை நடந்து வரும் குரு தசை சற்று மிதமான பலனையே கொடுக்கும். இன்னும் 9 மாத காலம் வரை தொழில், உடல் ஆரோக்யம் போன்றவற்றில் சற்று மிதமான பலன்களையே கொடுத்து வரும் இச்சூழ்நிலை தங்களுடைய 35 ஆவது வயது முடியும் பொழுது சமநிலைக்கு வரும்.
தற்பொழுது குரு கோட்சாரத்தில் மிகச் சிறப்பாக இருப்பதால் குழப்பமாக இருந்து வந்த குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமான சூழ்நிலை சென்ற மாதம் முதல் உருவாகியுள்ளது. எனவே, குடும்ப வாழ்க்கை சிரமமின்றி இருக்கும். கடின உழைப்பு, விடாமுயற்சி, பிறருடன் அன்பாகப் பழகுதல் ஆகியவை இப்பொழுது அதிகமாகத் தேவைப்படுகிறது. முன் கோபம், ஒத்துழையாமை ஆகியவற்றை இக்காலத்தில் கண்டிப்பாக விலக்குதல் வேண்டும். கோட்சார ரீதியாக 7 இல் ராகு சஞ்சாரம் செய்வதால் வயிற்றில் சிறு உபாதையும், நீர் சம்பந்தப்பட்ட தொல்லையும் உருவாகும். எனவே, மருத்துவ ப ரிசோதனைக்கு இக்காலத்தில் ஏற்பாடு செய்து கொள்வது நல்லது. இன்னும் 9 மாத காலம் சென்ற பின்பு நல்ல வருமானமும் குடும்ப உறுப்பினர்களால் ஆதாயமும் நண்பர்களிடமிருந்து ஆதரவும் கிடைக்கும்.
தற்பொழுது வக்ர குருவின் தசை நடந்து வருவதால் தங்களுடைய மத சம்பிரதாயப்படி வழிபாடும் ஜாதக ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை தோறும் அர்ச்சனை செய்து வருவது நல்லது. அவசர உதவி தேடி வருபவர்களுக்கு தகுதிக்கேற்ப உதவி செய்வதும் நல்ல ப ரிகாரமே.
எமது நல்லாசிகள்.
Disclaimer: Astrological consultation in this
section is provided by Guruji Karthika Siddarth
for free. Nilacharal.com cannot take any
responsibility for the authenticity and contents
of the response. |