|
<<<சென்ற
வாரம்
குருஜி
கார்த்திகா சித்தார்த் அவர்கள், நிலாச்சாரல்
வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு
அவர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் பதில்
தர இசைந்துள்ளார்.
பி.எச்.டி பட்டம் பெற்ற குருஜி கார்த்திகா
சித்தார்த் அவர்கள் இதுவரை 22000 மாணவர்களுக்கு
ஜோதிடக் கலையைப் பயிற்றுவித்திருக்கிறார்.
வேத சாஸ்திரம், பூஜை, ஹோமம், ரசவாதம் போன்றவற்றில்
வல்லுநரான இவருக்கு மூட நம்பிக்கைகளை ஒழித்து
இறைமையை நிலைநாட்டுவதே நோக்கம். இவரது கார்த்திகா
ஜோதிடப் பயிற்சி மையம் மூலம் ஒவ்வொரு வருடமும்
5000 மாணவர்கள் ஜோதிடத்தில் பட்டம் பெறுகிறார்கள்.
கார்த்திகா வித்யா பவன் ட்ரஸ்ட் என்ற அமைப்பையும்
இவர் நிறுவியுள்ளார்.
கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின்
இறுதியில் காணப்படும் படிவத்தை நிரப்புவதன்
மூலம் கேள்விகளை அனுப்பலாம். குருஜியின் பதில்கள்
'ஜோதிடம் கேளுங்கள்'
பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை இடம்
பெறும். கேள்வி கேட்கும் வாசகரின் பெயர் அல்லது
ஊர் மட்டுமே இங்கு வெளியிடப்படும். மற்ற விபரங்களை
நிலாச்சாரல் சேமித்து வைப்பதில்லை.
இந்த வாரக் கேள்விகள்:
நான் இப்போது வீடுவாங்கலாமா என யோசித்து வருகிறேன். கணித்து சொல்லவும்
-
விஜயலட்சுமி
இறைவனுள்; அன்புடைய செள. விஜயலட்சுமி,
எமது நல்லாசிகள்.
தங்களுடைய நட்சத்திரம்
உத்திரட்டாதி. மீன ராஸி. தற்பொழுது அஷ்ட்டம
ஸ்தானத்தில் கோட்சார ரீதியாக குரு சஞ்சாரம்
செய்கிறார். பஞ்சம ஸ்தானத்தில் சனியும், ஜென்மத்தில்
ராகுவும் 7 இல் கேதுவும் இருக்கிறார்கள்.
எனவே, தாங்கள் வரும் அக்டோபர் மாதம் 20 ஆம்
தேதிக்கு மேல் ஓராண்டு காலத்திற்குள் தங்கள்
பெயருக்கு சொந்தமாக வீடு வாங்கலாம். அதற்கு
முன்னேற்பாடான பணிகளை வரும் ஆவணி மாதத்தில்
இருந்து தொடங்கினீர்கள் என்றால் சாரியாக இருக்கும்.
வடக்கு திசை அல்லது கிழக்கு திசை நோக்கியுள்ள
வாசல் உடைய வீட்டை தோ;ந்தெடுத்துக் கொள்வது
நல்லது.
WANT TO KNOW MY FUTURE, MY MARRIED LIFE AND MY CAREER. PLEASE GIVE ME THE DETAILS. THANK YOU.
RASI: MAKRAM, NATCHATHIRAM: AVIDDAM.
- JAYALETCHUMY
இறைவனுள் அன்புடைய செள. ஜெயலட்சுமி,
எமது நல்லாசிகள்.
தங்களின் நட்சத்திரம் அவிட்டம் 2, மகர ராஸி. மகர லக்னம், ஜனன காலத்தில் செவ்வாய் தசை இருப்பு 4 வருடம் 6 மாதம் 29 நாள். தற்பொழுது தங்களுக்கு குரு தசை நடந்து வருகிறது.
தங்களுடைய ஜாதகப்படி 12க்கும் 3க்கும் உரியவர் தன்னுடைய தசையை நடத்தி வருகிறார். இந்த தசை சற்று சுமாரானது தான். தற்பொழுது கோட்சார ரீதியாக 10இல் குருவும் 7இல் சனியும் 3இல் ராகுவும் 9இல் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். உழைப்பு வீணாகும் காலமாக இப்பொழுது இருந்து வருகிறது. பொது வாழ்க்கை சிரமம் நிறைந்ததாக இருக்கும். இருப்பினும், கோட்சார பலன் தான் தங்கள் ஜாதகத்தில் நல்ல வழி முறைகளை வகுத்துக் கூறி வருகிறது. வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதிக்கு மேல் நடக்க இருக்கும் குரு மாற்றம் தங்களுக்கு நல்ல பலனை வழங்கும். திருமண வாழ்க்கையும் அதன் பின்னர் சிறப்புறும். தொழில் தொடக்கம், குடும்ப முன்னேற்றம், உறவினர் தரவு, கியவை சிறப்புறும் காலமாக இவ்வாண்டு இறுதி இருக்கும். 39வது வயதில் எச்சாரிக்கையாக செயல்படும் காலமாக இருக்கும். அக்காலத்தில் தெய்வ பாரிகாரம் கியவற்றை செய்து வந்தால் சிரமங்கள் பலவற்றில் இருந்து விடுபாடு கிடைக்கும். பொதுவாகத் தங்கள் ஜாதகம் முன்னேற்றமான காலத்தை எதிர்நோக்கியே உள்ளது. 2இல் செவ்வாய் இருப்பதால் தங்கள் ஜாதகம் செவ்வாய் தோஷ ஜாதகம். இதை அடிப்படையாகக் கொண்டு திருமண வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அது சிறப்பாக இருக்கும்.
தற்பொழுது 10இல் குரு இருப்பதால் தக்ஷிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வாருங்கள். எல்லாம் சுபமாகவே இருக்கும்.
எமது நல்லாசிகள். |