|
<<<சென்ற
வாரம்
குருஜி
கார்த்திகா சித்தார்த் அவர்கள், நிலாச்சாரல்
வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு
அவர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் பதில் தர
இசைந்துள்ளார்.
பி.எச்.டி பட்டம் பெற்ற குருஜி கார்த்திகா சித்தார்த்
அவர்கள் இதுவரை 22000 மாணவர்களுக்கு ஜோதிடக் கலையைப்
பயிற்றுவித்திருக்கிறார். வேத சாஸ்திரம், பூஜை, ஹோமம்,
ரசவாதம் போன்றவற்றில் வல்லுநரான இவருக்கு மூட
நம்பிக்கைகளை ஒழித்து இறைமையை நிலைநாட்டுவதே நோக்கம்.
இவரது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி மையம் மூலம்
ஒவ்வொரு வருடமும் 5000 மாணவர்கள் ஜோதிடத்தில் பட்டம்
பெறுகிறார்கள். கார்த்திகா வித்யா பவன் ட்ரஸ்ட் என்ற
அமைப்பையும் இவர் நிறுவியுள்ளார்.
கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின்
இறுதியில் காணப்படும் படிவத்தை நிரப்புவதன் மூலம்
கேள்விகளை அனுப்பலாம். குருஜியின் பதில்கள்
'ஜோதிடம்
கேளுங்கள்' பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை
இடம் பெறும். கேள்வி கேட்கும் வாசகரின் பெயர் அல்லது
ஊர் மட்டுமே இங்கு வெளியிடப்படும். மற்ற விபரங்களை
நிலாச்சாரல் சேமித்து வைப்பதில்லை.
இந்த வாரக் கேள்விகள்:
Guru
Ji Namaskar. When will I get further promotion? I
want to apply for a commissioned officer Post. How will
my future be ? - MARIAPPAN
இறைவனுள் அன்புடைய சிரஞ். மாரியப்பன்,
எமது நல்லாசிகள்.
பிறந்த தங்களுடைய நட்சத்திரம் திருவோணம் 3 ஆம் பாதம். மகர ராஸி. மிதுன லக்னம். 36 வருடம் 10 மாதம் வயதைக் கடந்த தங்களுக்கு தற்பொழுது குரு தசை நடந்து வருகிறது. தங்கள் ஜாதகப்படி 7க்கும் 10க்கும் உரியவர் தன்னுடைய தசையை நடத்தி வருகிறார். லக்ன ரீதியாக 4 இல் குரு உச்ச புதனோடு இணைந்து நிற்கும் ஜாதக அமைப்பு மிகச் சிறந்த நிலையை உணர்த்துவதாக உள்ளது. ஏற்கனவே உத்யோக உயர்வு பெற்ற தங்களின் தற்போதைய நிலையில் மீண்டும் உத்யோக உயர்வுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோட்சார ரீதியான குரு தற்பொழுது 10இல் சஞ்சாரம் செய்வது சற்று பின்னடைவு நிலையை ஏற்படுத்துகிறது. வரும் 6.1.2007 க்கு மேல் உள்ள ஒன்பது மாத காலத்திற்குள் மீண்டும் பதவி உயர்வு கிடைக்கும். அதற்கான முயற்சிகளை நீங்கள் இப்பொழுது இருந்தே மேற்கொள்ளலாம். சிறப்பான வாழ்க்கையைப் பெற்று வளமான எதிர்காலத்தை கொண்டுள்ள தங்களுக்கு இறையருள் அதிகமாகவே உள்ளது. இருப்பினும் இன்னும் 3 மாத காலத்திற்கு தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை தோறும் அர்ச்சனை செய்து வருவது தெய்வ அனுகூலத்தை கூட்டும்.
**********
நான்
நல்ல வேலையில்
இருந்தாலும் மன
சஞ்சலம் அதிகமாக
உள்ளது. அது போல,
எனது மகனின் எதிர்
காலம் குறித்தும்
கவலை அதிகம். தயவு
செய்து இவற்றைச்
சற்று கணித்து
சொல்லவும். மிக்க
நன்றி- UMASANKAR
இறைவனுள்
அன்புடைய
சிரஞ்.உமாசங்கர்
எமது
நல்லாசிகள்.
தங்களின்
ஜாதகம் மிகத்
தெளிவாக
கணிக்கப்பட்டது.
தனுசு லக்னம். அனுஷம் நட்சத்திரம்.
விருச்சிக ராஸி
என்ற ஜாதக
அமைப்பைக் கொண்ட
தங்களுக்கு
தற்பொழுது கேது
தசை நடந்து
வருகிறது.
இந்த கேது தசை
இன்னும் 11
மாதங்கள் வரை
இருக்கும்.
லாப
ஸ்தானத்தில் கேது
இருந்து அது 3
ஆவது தசையை
நடத்தும் காலம்
பொதுவாக
மந்தமாகவே
இருக்கும்.
அதேபோன்று
கோட்சார ரீதியாக 12
இல் குரு விரயமாகி
உள்ளார். இந்த நிலை மாற இன்னும் 3
மாதங்கள் ஆகும்.
இதற்கான சிறந்த பரிகாரம்
இடம் மாற்றமே.
தங்கள் மகனின்
எதிர்காலத்தைக்
குறித்து
கவலைப்பட
வேண்டாம்.
அவன் சனி
பகவானின்
பாதிப்பில்
தற்பொழுது
உள்ளான்.
இந்த நிலையும்
வெகு விரைவில்
மாறிவிடும்.
இப்பொழுது
தங்களுக்குத்
தேவை ஆழ்ந்த தெய்வ
வழிபாடு ஒன்று
தான்.
காளஹஸ்தி,
திருநாகேஸ்வரம்
போன்ற சர்ப்ப கிரஹ
ஸ்தலங்களுக்கு
சென்றோ அல்லது
வெள்ளி,
செவ்வாய்க்கிழமைகளில்
ராகு கேதுவிற்கு
அர்ச்சனை செய்தோ
வழிபாடு செய்து
வந்தால்
சிரமங்கள்
குறையும்.
மனச்சங்கடங்கள்
மறையும்.
குடும்பத்தில்
இருந்த
குழப்பங்கள்
நீங்கும்.
இன்னும் 3
மாதங்கள் சென்ற
பின்பு தங்கள்
குடும்பத்தில்
நல்ல
முன்னேற்றத்தைக்
காண்பீர்கள்.
கவலைப்பட
வேண்டாம்.
எமது நல்லாசிகள்.
**********
|