<<<சென்ற வாரம்
குருஜி கார்த்திகா சித்தார்த் அவர்கள், நிலாச்சாரல்
வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு அவர்களின்
ஜாதகத்தின் அடிப்படையில் பதில் தர இசைந்துள்ளார்.
பி.எச்.டி பட்டம் பெற்ற குருஜி கார்த்திகா சித்தார்த்
அவர்கள் இதுவரை 22000 மாணவர்களுக்கு ஜோதிடக் கலையைப்
பயிற்றுவித்திருக்கிறார். வேத சாஸ்திரம், பூஜை, ஹோமம்,
ரசவாதம் போன்றவற்றில் வல்லுநரான இவருக்கு மூட நம்பிக்கைகளை
ஒழித்து இறைமையை நிலைநாட்டுவதே நோக்கம். இவரது கார்த்திகா
ஜோதிடப் பயிற்சி மையம் மூலம் ஒவ்வொரு வருடமும் 5000
மாணவர்கள் ஜோதிடத்தில் பட்டம் பெறுகிறார்கள். கார்த்திகா
வித்யா பவன் ட்ரஸ்ட் என்ற அமைப்பையும் இவர் நிறுவியுள்ளார்.
கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின் இறுதியில்
காணப்படும் படிவத்தை நிரப்புவதன் மூலம் கேள்விகளை
அனுப்பலாம். குருஜியின் பதில்கள்
'ஜோதிடம் கேளுங்கள்'
பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை இடம் பெறும். கேள்வி
கேட்கும் வாசகரின் பெயர் அல்லது ஊர் மட்டுமே இங்கு
வெளியிடப்படும். மற்ற விபரங்களை நிலாச்சாரல் சேமித்து
வைப்பதில்லை.
இந்த வாரக் கேள்விகள்:
?
என் திருமணம்
எப்பொழுது? நான் விரும்பும் ஒருவரைத் திருமணம் செய்ய
முடியுமா?
- ஸ்ரீதேவி
இறைவனுள்
அன்புடைய செள. ஸ்ரீதேவி,
எமது நல்லாசிகள்.
விரோதிகிருது வருடம் பங்குனி மாதம் 12ஆம் தேதி 26.3.1972
அதிகாலை 5.45 மணிக்குப் பிறந்த தங்களின் ஜாதகத்தைக்
கணித்துப் பார்த்தோம். ஆயில்யம் நட்சத்திரம் கடக ராஸி மீன
லக்னம். தற்பொழுது தங்களுக்கு சந்திரன் தசை தொடங்கி 2
மாதங்கள் ஆகின்றன. 7 ஆம் இடத்து அதிபதி நீச்சம்
பெற்றுவிட்டார். தங்கள் ஜாதகப்படி ஏற்கனவே தங்களுக்கு 2
முறை குரு பலன் வந்துபோய் இருக்கிறது. திருமண யோகம்
குறைவாக உள்ள உங்கள் ஜாதகம் தெய்வ பரிகாரங்கள் பலவற்றை
செய்த பின்னரே தங்களின் விருப்பத்திற்கிணங்க திருமணம்
நடைபெறும். மூன்றாவது முறையாக வரும் ஐப்பசி மாதம் 3 ஆம்
தேதிக்கு மேல் குருபலன் வருகிறது. சுயம்வரா பார்வதி ஹோமம்
ஒன்றிற்கு சிறந்த வைதீகர்களைக் கொண்டு ஏற்பாடு செய்து
பரிகாரம் செய்து கொள்ளுங்கள். மேற்கண்ட தேதிக்குப் பின்னர்
தாங்கள் விரும்பும் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வீர்கள்.
****
?
நாங்கள் வீடு
வாங்க நினைக்கிறோம். ஆனால் வீடு அமையவில்லை. எப்போது
அமையும்? - ஜோஷி
இறைவனுள்
அன்புடைய ஜோஷி,
எமது நல்லாசிகள்.
பிங்கள வருடம் கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி (17.11.1977)
அன்று நள்ளிரவு 1.00 மணிக்குப் பிறந்த தங்கள் ஜாதகத்தை
ஆராய்ந்தோம். திருவோணம் நட்சத்திரம், மகர ராஸி, சிம்ம
லக்னம் என்ற ஜாதக அமைப்பைக் கொண்ட தங்களுக்கு தற்பொழுது
ராகு தசை நடந்து வருகிறது. 4 ஆவது இடத்தில் சூரியன் புதன்
சேர்க்கை இருப்பதாலும் 4 ஆம் இடத்து அதிபதி நீச்சம் பெற்று
இருப்பதாலும் இன்னும் ஓராண்டு காலம் போன பின்னர்
நிலபுலன்கள் மேன்மை ஏற்படும். தாங்கள் கட்டிய பழைய வீட்டை
வாங்குவதை விட நல்ல இடத்தைத் தேர்வு செய்து, வரும் ஆனி
மாதம் 22 ஆம் தேதிக்குப் பின்னர் வீடு கட்ட முயற்சி
செய்யுங்கள். பலிதமாகும். அதுவரை ராகு வழிபாடு
வெள்ளிக்கிழமை தோறும் செய்து வருவது நல்லது.
(தொடரும்)