|
<<<சென்ற
வாரம்
குருஜி
கார்த்திகா சித்தார்த் அவர்கள், நிலாச்சாரல்
வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு
அவர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் பதில் தர
இசைந்துள்ளார்.
பி.எச்.டி பட்டம் பெற்ற குருஜி கார்த்திகா சித்தார்த்
அவர்கள் இதுவரை 22000 மாணவர்களுக்கு ஜோதிடக் கலையைப்
பயிற்றுவித்திருக்கிறார். வேத சாஸ்திரம், பூஜை, ஹோமம்,
ரசவாதம் போன்றவற்றில் வல்லுநரான இவருக்கு மூட
நம்பிக்கைகளை ஒழித்து இறைமையை நிலைநாட்டுவதே நோக்கம்.
இவரது ' கார்த்திகா ஜோதிடப் பயிற்சி
மையம்' மூலம்
ஒவ்வொரு வருடமும் 5000 மாணவர்கள் ஜோதிடத்தில் பட்டம்
பெறுகிறார்கள். கார்த்திகா வித்யா பவன் ட்ரஸ்ட் என்ற
அமைப்பையும் இவர் நிறுவியுள்ளார்.
கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின்
இறுதியில் காணப்படும் படிவத்தை நிரப்புவதன் மூலம்
கேள்விகளை அனுப்பலாம். குருஜியின் பதில்கள்
'ஜோதிடம்
கேளுங்கள்' பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை
இடம் பெறும். கேள்வி கேட்கும் வாசகரின் பெயர் அல்லது
ஊர் மட்டுமே இங்கு வெளியிடப்படும். மற்ற விபரங்களை
நிலாச்சாரல் சேமித்து வைப்பதில்லை.
இந்த வாரக் கேள்வி:
என்
கணவருக்கு திருமணத்தில் முழு விருப்பம் இல்லை.
எப்பொழுது எங்கள் உறவு சீரடையும்?
- மோகனா
இறைவனுள் அன்புடைய சௌ.மோகனா,
எமது நல்லாசிகள்.
தங்களுடைய ஜாதகத்தை ஆராய்ந்தோம். பூரம் நட்சத்திரம்,
சிம்ம ராஸி, தனுசு லக்னம் என்ற அமைப்போடு கூடிய
தங்கள் ஜாதகத்தில் தற்பொழுது தங்களுக்கு செவ்வாய் தசை
நடந்து வருகிறது. தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம்
உள்ளது. தெய்வ சங்கல்பத்தால் நடந்த தங்கள்
திருமணத்தில் இடையூறுகள் எதுவும் வராது. குரு பலன்
முழுமையாக இல்லாததால் திருமண வாழ்வில் திருப்தி
இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. வரும் குரு
மாற்றத்திற்குப் பிறகு அதாவது 28.10.2006க்குப்
பின்னர் குடும்ப சூழ்நிலையில் நல்ல உறவு ஏற்படம்
கணவன் மனைவி இடையே சுமுகமான சூழ்நிலை உண்டாகும்.
அதுவரை காமாட்சி அம்மனை வெள்ளிக்கிழமை தோறும்
வழிபட்டு வாருங்கள். இறையருளினால் எதுவும் சாத்தியமே.
எனக்கு
குழந்தைp பேறு எப்போது கிடைக்கும் ? என் கணவர்
எப்போது எனது சொல்படி நடப்பார்? என்னை மதிப்பார்?
- பிரதீபா
இறைவனுள் அன்புடைய
சௌ.பிரதீபா,
எமது நல்லாசிகள்.
அஸ்தம்
நட்சத்திரம், கன்யா ராஸி, கடக லக்னம், என்ற அமைப்பைக்
கொண்ட தங்களுக்கு தற்பொழுது ராகு தசை நடந்து வருகிறது.
5 ஆம் இடத்து அதிபதி 9 இல் சூரியனுடன் இணைந்து
அஸ்தங்கத தோஷத்தைப் பெற்றுள்ளார். எனவே ஜாதகப்படி
தங்களுக்கு புத்திர தோஷம் உள்ளது. இருப்பினும் ராகு
தசையின் கடைசி பகுதியில் புத்திர புக்திக்கு உண்டான
சூழ்நிலை ஒன்று உருவாகும். வரும் தை மாதம் சந்தான
கோபால கிருஷ்ண ஹோமம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து
புத்திர பாக்கியத்தைப் பெற தெய்வ அருளை வேண்டுங்கள்.
இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அதிகாரம் உள்ள தங்கள்
ஜாதகம் புத்திர பேற்றை வழங்கும். குடும்பத்தில்
இவ்வாண்டு இறுதிக்குள் சில நல்ல சூழ்நிலைகள் ஏற்பட
இருக்கிறது. உங்கள் கணவர் உங்கள் சொல்படி நடந்து
தேவையானவற்றிற்கு உங்களை மதித்து நடப்பார். கவலைப்பட
வேண்டாம்.
|