|
திரு.
இசக்கி அவர்கள், நிலாச்சாரல்
வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு
அவர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் பதில் தர
இசைந்துள்ளார்.
ஆன்மீகம், தியானம், மணி, மந்திரம், வைத்தியம்,
ஜோதிடத்தின் (ஜாதகம், பெயரியல், எண்ணியல், எழுத்தியல்,
வாஸ்து) மூலம் தமது 30 ஆண்டுகால அனுபவத்தின் நற்கன்ம
வழியில் மனிதர்களின் தோஷங்கள் அகலவும், வாழ்க்கையில்
உயர்ந்த அந்தஸ்தை அடையவும், ஜோதிடம் மற்றும்
தியானத்தில் எளிதில் சித்தி பெறவும், சகல விதமான
நோய்களுக்கும் தீர்வு காண்பதற்கும் எங்களை அணுகலாம்
எனக் கூறுகிறார் இசக்கி அவர்கள்.
கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின்
இறுதியில் காணப்படும் படிவத்தை நிரப்புவதன் மூலம்
கேள்விகளை அனுப்பலாம். பதில்கள் 'ஜோதிடம்
கேளுங்கள்' பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை
இடம் பெறும். கேள்வி கேட்கும் வாசகரின் பெயர் அல்லது
ஊர் மட்டுமே இங்கு வெளியிடப்படும். மற்ற விபரங்களை
நிலாச்சாரல் சேமித்து வைப்பதில்லை.
இந்த வாரக் கேள்வி:
?
எனக்கு எப்பொழுது
மனதில் தெளிவு வரும்? வேலையில் எப்பொழுது ஒரு
நிரந்தரமும், மனதிற்கேற்ற வேலை கிடைக்கும்?
-
நாராயணன்
அன்புடையீர்! தற்போது வயது உங்களுக்கு 50 நடக்கிறது.
தனுசு லக்கனம் 10-க்கு அதிபதி. புதன் 9-ஆம் இடத்தில்
சூரியன் செவ்வாய் உடன் சம்பந்தப்பட்டு உள்ளதாலும்,
5-க்கு அதிபதி 9-ஆம் இடத்தில் அமர்ந்து சனிப் பார்வை
பெறுவதாலும், மன நிம்மதி இல்லாமலும், நிரந்தரமான வேலை
கிடைக்காமலும் உள்ளது. 5-ம் இடம் கேது உள்ளதால்
விநாயகரை வழிபட்டு வந்தால் மனதில் நிம்மதி பிறக்கும்.
நிரந்தரமான வேலை வருகிற செப்டம்பர் 10-க்கு மேல்
6-மாதங்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். ஐயப்பன்
வழிபாடு செய்தல், சபரிமலை சென்று வருதல் போன்றவற்றை
செய்து வர மன நிம்மதி உண்டாகும். உறவினர்களால்
எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
*******
?
என் லக்கினம்
சிம்மம், ஆனால் கம்யூட்டரில் கன்னி எனறு வரும்.
இது உங்கள் கவனத்திற்கு. 17 வருடமாக வெளிநாட்டில்
வசிக்கிறேன். இவ்வருடம் இந்தியா திரும்ப ஆசை,
நிறைவேறுமா? இந்தியாவில் வேலை கிடைக்குமா?
- சாம்பமூர்த்தி
அன்புடையீர்! தங்களுக்கு வயது 47 ஆகிறது. தங்களது
ஜென்ம லக்கனம் சிம்மமே ஆகும். 10-க்கு அதிபதி
சுக்கிரன் மகரத்தில் அமர்ந்துள்ளார். இது சரசேத்திரம்
ஆகும். எனவே தொழில் அந்நிய நாட்டில் செய்து
வந்துள்ளீர்கள். கோச்சாரப்படி வருகிற குருப்பெயர்ச்சி
15-11-2007-க்கு மேல் இந்தியா வர முயற்சிப்பது நல்லது.
லக்கனத்தில் ராகு அமர்ந்துள்ளதால் வெள்ளி, செவ்வாய்
விரதமிருந்து அம்மன் வழிபாடு செய்துவர இந்தியாவில்
வேலை கிடைக்கும். நிச்சயம் இந்தியா வந்து சேருவீர்கள்.
******* |