<<<சென்ற வாரம்
2. சந்திரன்
வடமேற்குத் திசை, வெண்முத்து, பிரமுகர்களின் மனைவியர், தாய்,
தாயுடனான உறவு, தாய்வழி உறவு, நுரையீரல், சிறு நீரகம், மனம்,
இரவு நேரம், முழுநிலா நாள், சஞ்சலம், தண்ணீர்த் தொடர்பான
இடங்கள், தொழில்கள், யார் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று
சொல்ல முடியாத இடங்கள் (உம்) நீச்சல் குளம், கல்யாண மண்டபம்,
காய்கறி மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையங்கள் முதலியன.
படகு, கப்பல் பயணம், 15 நாட்கள் துள்ளல், 15 நாட்கள் துவளல்,
திடீர்ப் பயணம், கண்டதும் காதல், சீஸனல் வியாபாரங்கள்,
மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வேலைகள், நதி, நதிக்கரை,
கடற்கரை, தாய் வயது பெண்கள், இரண்டேகால் நாட்களில் முடிந்து
விடக்கூடிய வணிகங்கள் இவற்றிற்கெல்லாம் சந்திரகியறி நானே
அதிபதி.
நீங்கள் புதுமை, என்றும் இளமை, பொதுமக்கள் ஆதரவு, நீண்ட
சுவாசம், திடீர் நன்மைகள், திடீர் பணவரவுகளுடன் வெற்றிமேல்
வெற்றி பெறுபவரா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள்
ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.
இதற்கு மாறாக நிலையில்லாத வாழ்க்கை, அடிக்கடி தொழில் மாற்றம்,
வேதனையுடனான ஊர் மாற்றம், மனச்சோர்வு, நோயாளியான தாய்,
நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சனைகளுடன் நீங்கள்
அவதிப் படுகிறீர்கள் என்றால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை
செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.
நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும்
பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையும் தீமைகள்
குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்
1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில்
உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).
2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப்
பார்த்துக் கொண்டிருங்கள்.
3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால்
மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.
4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான
குடிநீரையே அருந்துங்கள்.
5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள்.
முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.
6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.
7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை
எடுங்கள்.
8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி "பார்க்கலாம்"
“பார்க்கலாம்" என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.
9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை
மறக்காதீர்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில்,
அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.
10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது.
(தொடரும்)