<<<சென்ற வாரம்
3.
செவ்வாய்
இதுவரை உங்களிடம் பேசினார்களே சூரியன், சந்திரன், இவர்களுக்கு
மட்டுமில்லை, மற்றுமுள்ள ராகு, குரு, சனி, புத, கேது, சுக்ரன்
எல்லோருக்குமே சேனாதிபதி நான் தான். மற்ற கிரகங்கள் தீமை
செய்யும் நிலையிலிருந்தால் "சூரியன் பலமிழந்துட்டாரு", "கேது
கெட்டிருக்காரு" என்று தான் ஜோதிடர்கள் சொல்வார்கள். நான்
தீமை செய்யும் நிலையில் இருந்தால் மட்டும் ஜாதகத்தையே தோஷ
ஜாதகம் என்று ஓரமாய் வைத்து விடுவார்கள்!
ஏன் தெரியுமா? என் இலாகா அப்படி! நான் அதிகாரம் செலுத்தும்
விஷயங்கள் அப்படி!
வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள்,
மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள்
வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை
இவையே - நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம்,
நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய
குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை
எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.
சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள்,
போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால்,
கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின்
கீழ் வருபவையே.
நீங்கள் ஹை, லோ பிபி, ரத்தசோகை, அல்ஸர் போன்ற வியாதிகளால்
அவதிப்படுபவரா?
சகோதரர்களே எதிரிகளாகி, பிற எதிரிகளுடன் சேர்ந்து உங்களைத்
தொல்லைப்படுத்துகிறார்களா? ஏற்கனவே விபத்து, தீவிபத்து
எதிலாவது சிக்கியுள்ளீர்களா? அறுவை சிகிச்சை நடந்துள்ளதா?
காதல் திருமண விசயங்களில் பின்னடைவால் வருந்துபவரா? "ஆம்"
என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை
செய்யும் நிலையில்
உள்ளேன் என்று அர்த்தம்.
மேற்சொன்ன உபாதைகள் ஏதுமின்றி நான் அதிகாரம் செலுத்தும்
துறைகளில் எந்தப் பிரச்சினையுமின்றி தொழில், வியாபாரம் செய்து
வருகிறீர்களா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள்
ஜாதகத்தில் நன்மை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்று
அர்த்தம்.
நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி
கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள், என்னால்
விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்
1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக்
கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு
ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும்
ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து
தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ
வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு
என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை
நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால்
கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென்
கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில்
மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின்
வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக்
கொள்ளப்பாருங்கள்.
8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள்.
அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்.
(தொடரும்)