<<<சென்ற வாரம்
8. கேது
கேது போல் கெடுப்பவனில்லை என்பது ஜோதிட பொன்மொழி. ஆம்! நட்பு,
உறவு, பந்தம், பாசம் எல்லாவற்றையும் நான் கெடுக்கிறேன். ஏன்
தெரியுமா? நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச
மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது
மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம்
'நம்மவர்' என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய
வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும்,
விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப
முடியும். இப்போது தமிழக முதல்வருக்கு எனது திசை நடந்து
வருகிறது.
இனி என் அதிகார எல்லையைப் பார்ப்போம். புண்கள், சீலைப்பேன்,
அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை,
உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம்,
வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில்
ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை
செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின்
அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும்
கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி
நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில்
இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம்
அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி
விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம்.
1. எளிமையான வாழ்வு.
2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.
3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.
4. யோகம் பயிலுதல்.
5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.
6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.
7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.
8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத்
தவிர்த்தல்.
குறிப்பு
ராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில்
அதாவது 1800-ல் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான
பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து
கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய,
பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும்
செய்து கொள்ள வேண்டும்.
மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க
வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய
பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும்
விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
(தொடரும்)