*******
அரசுத்
திட்டங்கள் மூலம் இந்தியாவில் ஒரு ஏழைக்கு ஒரு ரூபாய் அளிக்க
ஆகும் செலவு மூன்று ரூபாய் அறுபைந்தைந்து காசுகள். இவ்வாறு
கூறுபவர் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் பிமல் ஜலான். தனது
'இந்திய அரசியல் - பின்னாலிலுருந்து ஒரு பார்வை" என்ற
புத்தகத்தில், விநியோக முறை மிகவும் மோசமாக உள்ளது எனக்
கூறும் அவர் ஒரு கிலோ உணவுப்பொருள் அளிக்க 2.4 கிலோ
உணவுப்பொருளைத் தர வேண்டியிருக்கிறது எனச் சொல்கிறார்.
2003-4ம் ஆண்டுகளில் நுகர்வோர் மானியமாக 16 மாநிலங்களில்
கொடுக்கப்பட்ட 7200 கோடி ரூபாயில் 4200 கோடி ரூபாய்
வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களைச் சென்றடையவில்¨லை.
இந்த 4200 கோடியில் 2640 கோடி ரூபாயை வினியோக நடைமுறையில்
இடம் பெற்றுள்ள துறைகளே விழுங்கிவிட்டனவாம். இதனால்
மக்களுக்கு மானியங்கள் வழங்குவதைவிட அதற்கான வவுச்சர்களை
வழங்கலாம் என்று யோசனை கூறுகிறார். அது சரி, அதனால் அரசியல்
வாதிக்கு என்ன லாபம்?
சுண்டைக்காய்
கால் பணம் சுமைகூலி முக்கால் பணம் என்று இதைத்தான்
சொல்கிறார்கள் போலிருக்கிறது.
*******
சமயம்
கிடைக்கும் போதெல்லாம் ஆத்திகர்களின் மனதைப் புண்படுத்துவது
நமது கலைஞரின் தனிவழி.
ஆளில்லாத
ரயில்வே கிராசிங்கில் காஞ்சிபுரம் அருகே ஒரு வேன், ரயிலில்
மோதியதால் பல உயிர்கள் பலியானது வேதனைக்குரிய விஷயம். இதையும்
தனது வேடிக்கை என்று நினைத்துப் பேசும் பேச்சால் ஒரு முதல்வர்
"கோவிலுக்குச் செல்வதற்காக வேன் திருப்பப்பட்டதால் கடவுள்
நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று சொல்லமாட்டோம்" எனக்
கூறியிருப்பது தேவையில்லாத ஒன்று. அரசியல் தலைவர்களின்
கூட்டங்களுக்காகத் தொண்டர்கள் கிடைத்த வாகனங்களில் ஏறி
முண்டியடித்து, தங்கள் தலைவரின் முக தரிசனத்திற்காகக்
காத்திருக்கிறார்களே, அப்பொது தங்கள் உயிரையும் பணயம்
வைக்கிறார்களே, அப்போது அந்தத் தலைவர்கள் இழப்பீடு கொடுக்க
வேண்டுமென்றா கூறினார்கள்?
ஆளில்லாத
லெவல் கிராசிங்குகளில் குறைந்த பட்சம் ஒரு ஸ்டாப் அறிகுறியையோ
அல்லது வேகத்தடையையோ வைக்கலாமே. காரியத்தை விட்டுவிட்டு,
கவைக்குதவா வாதத்தைப் பேசுவது வெட்டி (வேட்டி)அரசியல்!
*******
பாரதிய ஜனதா
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாபுபாய் கட்டோரா. அவர்
டில்லியின் பன்னாட்டு விமான தளத்தில் கைது
செய்யப்பட்டிருக்கிறார். காரணம், தன் மனைவியென்று சொல்லி
இன்னொருவரை டோரண்டோ செல்லும் விமானத்தில் ஏற்றிச் செல்ல
முயன்றிருக்கிறார். ஆனால் பாவம் பாஸ்போர்ட் புகைப்பட
வித்தியாசத்தால் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டு கைது
செய்யப்பாட்டிருக்கிறார். இதுதான் நமது பாராளுமன்ற
உறுப்பினர்களின் நேர்மை!
*******
ராகுல்
காந்தியா அல்லது ரா(ங்)குல் காந்தியா என ஒரு சீரியசான
சந்தேகம் வந்து விட்டது. வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க
மாட்டடார் இவர். முன்பு ஒரு முறை நாங்கள் ஆட்சியிலிருந்தால்
பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டிருக்காது எனத் திருவாய்
மலர்ந்தருளினார். இப்போது அதைத் தோற்கடிக்கும்படி இந்தியா
சுதந்திரம் பெற்றதற்கும்,1971ல் பாகிஸ்தான் இரண்டாகப்
பிரிந்து வங்க தேசம் வந்ததற்கும் நேரு குடும்பமே காரணம் என்று
இரு பயங்கர அதிரடி போட்டிருக்கிறார். சரித்திரம்
தெரியாவிட்டல் இங்கிதம் கூடத்தெரியாதா? பாகிஸ்தானில் இவர்
சொன்னதை வைத்துக்கொண்டு பாகிஸ்தானில் உள்நாட்டு விவகாரங்களில்
இந்தியா தலையிட்டதற்கு இது முக்கிய ஆதாரம் எனக் கண்டனக்
குரல்கள் வருகின்றன. இது தேவையா? ஆனால் காங்கிரஸ் கட்சி இவரை
உ.பி. அரசியலில் முக்கியப் பிரமுகராக ஆக்க முயற்சிக்கிறது.
மன்மோஹன் சிங்ஜி உ.பி.யில் ராகுல் தான் வருங்காலத் தலைவர்
என்று நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்லி இருக்கிறார். அவர் என்ன
செய்வார் பாவம்! பேசுவிக்கிறவர் பேசுவித்தால் பேசாதவர் யாரே?
சொன்னார்கள்:
"சில
நீதிபதிகளுக்கு மன சாட்சியே இல்லை. உலக வரலாற்றைப்
படிக்காதவர்கள், இந்திய வரலாற்றின் சமூக நீதியைப்
படிக்காதவர்கள் இன்றைய நீதிபதிகளாக வருகின்றனர்."
இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழுத் தலைவர்
திரு நல்லகண்ணு
(நல்லாச்சொன்னே கண்ணு!) நீதிபதிகளுக்கு கெட்ட கண்ணு!
*******