●
பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை
●
வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மீன்களின் எண்ணிக்கைக்
குறைந்துபோவதில்லை.
●
புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால் ஒவ்வொரு மனிதனின்
இதயமும் கல்லறைதான்
●
தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை
●
காயங்களுக்கு மருந்து வேண்டாம், கனிவான பார்வை போதும்
●
எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், ஏமாற்றத்தால்
சோர்வடையமாட்டாய்
●
வீட்டுக்குள் நடப்பதை வீதிக்கு எடுத்துச்செல்லாதே, வீதியில்
பாதித்தவற்றை வீட்டுக்குக் கொண்டுவா
●
குழந்தையை ரசிக்கக் கற்றுக்கொள். குணவானாவாய்
●
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
*******