திருமணமாம்,
திருமணம்!
நடிகை மாளவிகாவுக்கும் கேரளத்தைச் சேர்ந்த சுமேஷ்
என்பவருக்கும் மார்ச் 7ம் தேதி திருமணம். " என்
திருமண வாழ்க்கை என் திரை வாழ்க்கையைப் பாதிக்காது,.
முகம் சுளிக்கும் காட்சிகளில் இதுவரை
நடித்ததில்லை.(ஓ!அப்படியா?) இனிமேலும் நடிக்க
மாட்டேன் என்கிறார்" மாளவிகா.
***
'மக்குப்பையா மக்குப்பையா, என்னை மயக்கித் தொலையேண்டா'
என்ற மிக இலக்கிய நயம் வாய்ந்த பாடல் இடம் பெறும்
படம் அர்ஜுன் தயாரிக்கும் தவம். இதில் மக்குப் பையன்
அருண் விஜய், மயக்கச் சொல்லி கேட்கிறவர் நடிகை
அர்பிதா!
***
பெரியார் படத்தை வெளியிடுவதற்கு முன் கலைஞருக்குப்
போட்டுக் காண்பித்தார்கள். பல காட்சிகள் அவருக்குத்
திருப்தி அளிக்கவில்லை. காட்சிகள் முழுமையாக
இல்லையென சொல்லிவிட்டதால் மீண்டும் அந்தக் காட்சிகளை
எடுக்கிறார்களாம். ( வேறு வழி!)
***
காசு இருக்கணும்
பணம் வாழ்க்கைக்கு அவசியம், ஆனால் பணம் மட்டுமே
வாழ்க்கையாக ஆகிவிடாது என்ற தத்துவத்தை மையமாகக்
கொண்டு வரும் திகில் படம் "காசு இருக்கணும்". இதில்
இயக்குனர் பாக்கியராஜ் வில்லனாக நடிக்கிறார்.
(படத்திற்கு வசூலும் இருக்கணும்!)
***
விஜயும் அசினும் நடித்து கேரளாவில் சக்கை போடு போட்ட
போக்கிரி இப்போது பாலிவுட் போகிறார். சல்மான்கான் தான்
கதாநாயகன். சங்கர் தாதா என்ற பெயரில்
வரவிருக்குமிந்தப் படத்தில் சங்கர் தாதாவிற்குப் பொருத்தமான தாதியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
***
வட்டாரம் படம் மூலம் சினிமாவில் கால் பதித்திருக்கும்
அதிசயா இப்போது எல்லா இளம் நடிகர்களுடன் நடிக்க
ஆவலாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். முகம்
சுளிக்காத அளவிற்கு க்ளாமராக நடிக்கத் தயாராம். (அது
என்னது பாலுக்கும் காவல,் பூனைக்கும் தோழன் என்பது
மாதிரி)
***
கதை அப்படி
மகாபாரதத்தில் திரெளபதி சபையிலே அவமானப்படுத்தப்பட்டாள். ஆனால் இந்தப் படத்தில் ஒரு பெண் ஆண்களை
அவமானப்படுத்துகிறாள் என்பதுதான் படத்தின் கதை
என்கிறார் 'கதை அப்படி' படத்தின் இயக்குனர். (கதை
அப்படிப் போவுதா?)
***
ஐந்து ஜோடிகளுடன் நான் அவனில்லை படத்தில் நடிக்கும்
மச்சமுள்ள ஜீவன் மச்சக்காரன் என்ற படத்தில் நடிக்க
ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதயத்திருடன் படத்தில்
நடித்த காம்னாதான் நாயகி.
***
பிக் பிரதர் புகழ் ஷில்பா ஷெட்டியின் தங்கை ஷமீதா
ஷெட்டி இப்போது ராம்கோபால் வர்மா எடுக்கும் லீலை
படத்தில் நடிக்கிறார். இவர் ராஜ்ஜியம் படத்தில்
நடித்திருக்கிறார் (என்பது தெரிந்ததே). மாதவனும்
இந்தப் படத்தில் நடிக்கிறார்
***
நண்பனின் காதலி என்ற முழுநீள ஹாஸ்யப் படத்தில்
நடிக்கும் விக்ரமாதித்யன் வினுசக்ரவர்த்தியை அடிக்க
வேண்டிய ஒரு காட்சியில் நிஜமாகவே பின்னி விட்டார்.
படப்பிடிப்பு பாதிநாள் நின்றுபோய் சமாதானப்படுத்துவது பெரும் பாடாகிவிட்டதாம். ஒரு கொசுறு
செய்தி. இந்தப்படத்தில் "ஒஸ்தாவா , ஒஸ்தாவா,
உரசிகொள்ள ஒஸ்தாவா" என்று ஒரு ஒசத்தியான பாட்டு இடம்
பெறுகிறது.
*****