கேண்ஸ் திரப்பட விழாவில் வெயில்
இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வெளிவந்த 'வெயில்'
கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளிச்சத்தைப் பார்க்கிறது.
கேன்ஸ் திரப்பட விழாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே
தமிழ்த் திரைப்படம் வெயில் என்பது தமிழ்த்
திரையுலகிற்குப் பெருமை தரும் சேதி. படம் மே மாதம்
19ம் தேதி திரையிடப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கரும்
இயக்குனர் வசந்தபாலனும் கலந்து கொள்கிறார்கள்.
வெயிலின் அருமை கேன்சில் தெரியும்.
ஒரு கல் இரண்டு மாங்காய்
இளைஞர்களின் கனவுக் கன்னி த்ரிஷா இப்போது
செல்வராகவனின் படத்தில் நடிக்க வேண்டும் என்று கண்ட
கனவு நிறைவேறியிருக்கிறது. அதோடு தான் கம்ப்யூட்டர்
இஞ்சினியராக வேண்டும் என்ற ஆசையும் ஈடேறியிருக்கிறது.
ஆமாம், செல்வராகவனின் அடுத்த படத்தில் அவர்
கம்ப்யூட்டர் கம்பெனி முதலாளியாக நடிக்கிறார்.
'காள'ய அடக்க வந்த கன்னி
சிம்புவின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் 'முனி'
புகழ் வேதிகா. ஒவ்வொரு கதாநாயகியாகக் கழன்று கொள்ள,
கடைசியில் இந்தக் "காள"யின் (படத்தின் பெயராம் )
திமிரு (ஆமாம் இப்படத்தை டைரக்ட் செய்பவர் திமிரு
படத்தை இயக்கிய தருன் கோபி) அடக்க வேதிகா மணி
கிட்டியிருக்கிறார்.
சீச்சீ இந்தத் தமிழ் புளிக்கும்
தவமாய் தவமிருந்து, பட்டியல் ஆகிய படங்களில் தனது
திறமையைக் காட்டிய பத்மப்ப்ரியா இப்போது தமிழில்
நடிக்கும் ஒரே படம் வசந்தின் "சத்தம் போடாதே".
அதற்குப் பிறகு வேறு ஒரு படமும் இல்லை. அவர்
கூறுகிறார், தமிழ்ப் படங்களில் இரண்டு டூயட் பாட்டு
கொஞ்சம் அழுகை, இதைத்தவிர நடிக்க வாய்ப்பேயில்லை
என்று மலையாளப் படங்களில் நல்ல வாய்ப்புக்கள்
கிடைக்கிறதாம். காற்று அடிக்கும் பக்கம் சாய
வேண்டியதுதானே!
நோ அழகப்பன்
இம்சை அரசனுக்குப் பிறகு வடிவேலுவிற்குக் கதாநாயகனாக
நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புக்கள். ஆனால் எல்லாவற்றையும்
ஒதுக்கிய அவர் இந்திர லோகத்தில் நா. அழகப்பன்
படத்திற்கு நடிக்கத் தலையாட்டினார். இவருடன் ஜோடியாக
நடிப்பது சிம்ரனா, ஷில்பா ஷெட்டியா அல்லது மல்லிகா
ஷெராவத்தா என்ற போட்டி நிலவி வந்த நிலையில் படமே
கைவிடப்பட்டுவிட்டதாம். வடிவேலுவிற்கு ஊதியமாக ஆறு
கோடி ரூபாய் பேசப்பட்டு 50 லட்சம்
கொடுக்கப்பட்டுவிட்டது. படம் நின்று போகக் காரணம்,
தயாரிப்பளர் வடிவேலு நடிப்பதைச் சொல்லி ஒரு •பினான்சியரிடம்
கடன் கேட்டிருக்கிறார். நடிப்பது வடிவேலு என்பதால்
தலையாட்டிய கடன் கொடுப்பவர் வடிவேலுவிடமும் இது
பற்றிக் கேட்டிருக்கிறார். அப்போது வைகைப்புயல், "நான்
நடிக்கிறேன் என்பதற்காகப் பணம் கொடுக்காதீர்கள்.
தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடமும் நம்பிக்கை
இருந்தால் கொடுங்கள்' என்று சொல்லவே (வாஸ்தவம்தானே)
•பைனான்ஷியர் பின் வாங்கிவிட்டார். இப்போது படம்
அந்தர லோகத்தில்.
'பாஷா'வின் பாட்டுக்கள் பேஷா வந்திருக்காமே!
சிவாஜி படத்தின் வெளியீட்டில் இன்னும் குழப்பம்.
தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லப்பட்டது ஏப்ரல் 12
என்று மாறி, பின்னர் ஏப்ரல் 26, மே 17 என்று
சொல்லப்படுகிறது. எப்போ வந்தாலும் நாங்க
காத்துக்கிட்டிருக்கோம் எங்க சிவாஜியைப் பார்க்க
என்கிறார்கள் ரசிகர்கள். ஏங்க வைக்காதீர்கள்!
பாட்டுக்கள் எல்லாமே, பன்ச்சுடன் பிரமாதமாக
வந்திருக்கிறதாம். ரஹ்மானின் தொப்பியில் இன்னொரு
இறகாம்.
*****