பெரியார் படத்தின்
நூறவது நாள் விழாவில் முதல்வர் கலந்துகொண்டு படத்தில் நடித்த
நடிகர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் விருதுகள் அளித்துப்
பாராட்டினார். பெரியாராக நடித்த, இல்லை வாழ்ந்த சத்யராஜுக்குப் பெரியாருக்குச் சொந்தமான ஒரு பச்சைக்கல் மோதிரம்
அணிவித்துத்ப் பாராட்டினாராம். "என்னம்மா கண்ணு, மகிழ்ச்சியா?"
என்று கேட்டிருப்பாரோ?
***
அழகிய தமிழ் மகன் படப்பிட்டிபிற்குக் கால ஷீட் பிரச்னை
தருகிறாராம் ஸ்ரேயா (சிவாஜி கொடுத்த தெம்போ?) விஜய் அவரை
அழைத்து டோஸ் விட்ட பின்பு கூட சொதப்பல்தானாம்.
***
அஜீத் இப்பொதெல்லாம் வயைத் திறந்தால் ஒரே ரஜினி புகழாரம்
தானாம். காரணம் கேட்டால் ரஜினி கொடுத்த புத்தகம் ஒன்று அவர்
வாழ்க்கையையே மாற்றி விட்டதாகக் கூறுகிறார்.
Living with
Himalayan Master
என்ற புத்தகத்தை அஜித்- ஷாலினிக்கு ஒரு விருந்தளித்தபோது
பரிசாகக் கொடுதாராம். 'தல'யின் தலையெழுத்தையே இந்தப் புத்தகம்
மாற்றி அமைக்குமா?
***
நடிகர்கள் இருவரின் ரசிகர் மன்றத்தினரிடையே மோதல் ஏற்படுவது
சகஜம். ஆனால் சென்னையில் ஒரு தியேட்டரில் திரிஷா ரசிகர்
மன்றத்தினருக்கும் அஜீத் ரசிகர் மண்றத்தினருக்கும் படு
மோதலாம். ஒருவரின் பேனரை மற்ற ரசிகர் மன்றத்தினர் கிழித்து
ரகளை செய்துவிட்டார்களாம். இதன் நடுவில் விஜய்தான் இப்படி
செய்யச் சொன்னார் என்று ஒரு வதந்திப் பட்டாசை ஒருவர்
கொளுத்திப்போட, கேட்க வேண்டுமா?
***
மதுரைப் பொண்ணு படத்தில் எஸ்.எஸ்.ஆரின் பேரன் பங்கஜ்குமாரும்,
(முன்னாள் நடிகை) பிந்துகோஷின் பேத்தி தேஜாமயியும்
நடிக்கிறார்கள். திருப்பதியில் படப்பிடிப்பின் நடுவில்
திடீரென தேஜாமயி காணாமல் போக, அவரைத் தேடித் தேடி அனைவரும்
நொந்து போக, சாவதானமாக வருகிறாரம். கேட்டால் ஏழுகொண்டலவாடுவை
தரிசனம் செய்யப் போனேன் என்கிறாராம்.
***
கல்யாணப் பேச்சில் அடிக்கடி அடிபடுகிறவர் மீரா ஜாஸ்மின்.
கல்யாணம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் நேபாளி
படத்திற்குப்பின் நடிக்கப் போவதில்லை என்கிறாராம். இது போல
எத்தனை பேரைப் பார்த்திருக்கிறோம்.
***
நடிகர் மைக் மோகனை நினைவிருக்கிறதா? அதான் மவுனராகம் புகழ்!,
நீண்ட நாட்களுக்குப் பின் சுட்ட பழம் என்ற படத்தில்
நடிக்கிறாராம். தடைகளைத் தாண்டி வெற்றி பெறும் ஒரு மனிதனின்
கதையாம் இது. சுபா புஞ்சா கதாநாயகி. மோகனுக்கு பின் குரல்
சுரேந்தர்தானா?
***
இயக்குனாராகக் கொடிகட்டிப் பறந்து, இப்பொது நடிகராக முழங்கும்
மணிவண்ணன் கடைசியாக இயக்கிய படம் சத்யராஜ் நடித்த ஆண்டான்
அடிமை. இப்போது மீண்டும் இயக்குனராகத் தன் வாரிசு ரகுவண்ணனைக்
கதநாயகனாக்கி ஒரு ரவுண்டு வரப் போகிறார்.
***
கதாநாயகியாக வளர்ந்து பின் ஒரே ஒரு நடனக் காட்சியில் மட்டும்
தோன்றி வந்த மாளவிகா இப்போது திருமணத்திற்குப் பின்
கட்டுவிரியன் என்ற படத்தில் இரண்டு வித்தியாசமான
பாத்திரங்களில் தோன்றுகிறாரம். நோட்டுக் கட்டுகள் செமையாக
விரிந்திருக்குமே?
*******