ஹாப்பி -
இன்றுமுதல் ஹாப்பி
சென்ற செப்டம்பர் 11ம் தேதிதான் சூர்யா ஜோதிகா ஜோடி
திருமணம் நிகழ்ந்த நாள். ஒரு வருடம் ஓடிவிட்டது. இந்த ஆண்டு
முழுதுமே சிவகுமார் வீட்டில் நல்லசேதிதான், சூர்யா ஜோடிக்கு
அழகான பெண்குழந்தை (தியா), சூர்யாவின் சகோதரர் கார்த்திக்கின்
பருத்தி வீரன் சக்கைப்போடு போட்டது, இப்போது சூர்யா ஜோடிக்கு
தமிழக அரசின் பரிசு. என்றுமே இன்றுபோல் ஹாப்பியாயிருக்க
வாழ்த்துக்கள்.
******
மீண்டும்
ஜெமினி
ஜெமினியின் சந்திரலேகாவை யாரும் மறந்திருக்க முடியாது.
ஜெமினியும் ஏ.வி.எம்.மும்தான் அந்தக் காலத்திலிருந்தே
திரையுலகில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். ஆனால் ஜெமினி
படத் தயாரிப்பு ஏனோ ஒதுங்கியிருந்து. சமீப காலமாக சின்னத்
திரையிலேயே விகடன் டெலிவிஸ்டாஸ் என்ற பெயரில் தலை
நீட்டியிருந்தார்கள். இப்போது மீண்டும் திரையில் தடம்
பதிக்கப் போகிறார்களாம். அனுராதா ஸ்ரீராம் இசையில் ஆர்யா
நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இயக்குனர் பாலாவின்
உதவியாளர் சரவணனின் இயக்கமாம். வாழ்த்துக்கள்.
******
நான் ரொம்ப
பிஸி
திரையுலகில் இப்போது ரொம்ப பிஸியான, மற்றும் குஷியான
மனிதர் ஷங்கராகத்தான் இருக்கும். அவரது சிவாஜி எல்லா
ரிகார்டுகளையும் உடைத்து சாதனை படைக்க, அவரது தயாரிப்பான 'வெயில்'
வெளிநாடுகளிலும் வெற்றிக்கொடி நாட்ட, கல்லூரி, அறை எண் 305ல்
கடவுள் (இந்தக் கடவுளின் தரிசனம் நவம்பரில் கிடைக்குமாம்)
என்ற இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. அவர் தனது
அடுத்த தயாரிப்பிற்காகக் கதையைத் தேர்ந்தெடுப்பதில்
மும்முரமாக இருக்கிறார். இவ்வளவு அவசரம் ஏனென்றால்
இதற்குப்பிறகு தனது கனவுத் தயாரிப்பான ரோபோவைத் துவக்கப்
போகிறாராம். அப்போது வேறு படங்களை கவனிக்க ஏது நேரம்?
******
கெட்டவன்
சிம்புவிடம் "ஏன் உங்கள் படதிற்குக் ' கெட்டவன்' என்று பெயர்
வைத்திருக்கிறீர்கள்?" எனக் கேட்டபோது கெட்டவன் என்றால் அது
மோசமான ஆள் என்று பொருளில்லை. காதலியை நம்பிக் கெட்டவன்
என்றுதான் பொருள். ஒரு காதலனுக்குக் காதலியால் ஏற்படுத்தும்
வலியை அவனால்தான் உணர முடியும் என்று ஒரு பிரபல வார இதழில்
பதில் சொல்லியிருக்கிறார். நயன்தாராவுடனான காதல் தோல்விதான்
இதன் கதையா என்று கேட்டதற்கு அவரது அழுத்தமான பதில் "இல்லை".
பிரபலங்கள் இல்லையென்றால் "ஆமாம்" என்று தானே அர்த்தம்?
******
சென்னைச்
செந்தமிழ்
தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று அரசு
அறிவித்தபிறகு பல தயாரிப்பாளர்களும் சென்னைச் செந்தமிழில் 'பொறுக்கி',
'உடம்பு எப்படியிருக்கு', 'கெட்டவன்', 'பொல்லாதவன்'
என்றெல்லாம் நாமகரணம் சூட்ட, அரசு விழித்துக்கொண்டு
இந்த மாதிரி பெயருக்கெல்லாம் விலக்குக் கிடையாது என்று
சொல்லிவிட்டது. இப்போது சுந்தர். சி யின் அடுத்த படத்திற்கு
'அதிருதில்ல' (உடம்பு எப்படியிருக்கு?) என்று பெயர்
மாற்றிவிட்டார்களாம்!
******
ஓ அப்படியா?
திரை உலகின் லேட்டஸ்ட் கிசு கிசு. கொஞ்ச நாட்களுக்கு
முன்னால் மணிரத்னம் ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசியது சினிமா
உலகின் புருவங்களை உயர்த்தியது. இப்போது ரஜினிகாந்த் கமலை
அவரது வீட்டில் சென்று சந்தித்தாராம். பிறகு ராகவேந்திரா
கல்யாண மண்டபத்தில் ஒரு மணி நேரம் ஆலோசனை. கமலஹாசன் மணிரத்னம்
டைரக்ஷனில் ரஜினியை வைத்துப் படமெடுக்கப்போகிறார் என்பதுதான்
சமீபத்திய பரபரப்பான செய்தி. திரையுலகின் மும்மூர்த்திகளும்
ஒன்று சேர்ந்தால் ரசிகர்கள் ஒரு பெரிய விருந்தை
எதிர்பார்க்கலாம்
*******