இராசிபலன்கள் (04-10-2010முதல்10-10-2010வரை)

1. மேசம்:-

மேசராசி அன்பர்களே சனி நன்மை தரும் கிரகமாகும்.வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் வேற்று மதத்தவர்களால் எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். திடீர் அதிர்ஸ்டமாகிய ரேஸ் லாட்டரி போன்றவற்றால் தன வரவுகள் உண்டு. மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது. சூதாட்டத்தால் வீண் பொருள் விரையம் ஏற்படக் கூடும். காதல் விசயங்களில் வெற்றி கிடைக்கும். அரசு வழக்குகளில் சாதகமான சூழ்நிலை உருவாகும். இரும்பு இயந்திரம், இரசாயனம் சம்பந்தமாகிய தொழில்களைச் செய்வோர்கள், பலசரக்கு, எண்ணை சம்பந்தமான வியாபாரிகள், பழைய பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள், மாமிச உணவுகளின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள். புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதில் கால தாமதம் ஏற்படலாம். சகோதர சகோதரிகளின் தடை பட்ட சுபகாரியங்கள் நடை பெறும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பெரியவர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பெண்களால் வடதிசையில் இருந்து சில நற்செய்திகள் வந்து சேரும். ஒரு சிலர் இருப்பிடம் விட்டு வெளியூர் செல்ல வாய்ப்பு உள்ளது. புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்காக வெகு முயற்சிகளை செய்து கடனை அடைப்பீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து எள் சாதம் தானம் செய்யவும்.

2. ரிசபம்:-

ரிசபராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பங்காளிகளாலும், நண்பர்களாலும் சிற் சில தொல்லைகள் ஏற்படலாம். ஆலயங்களைத் திருத்தி அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள் வாகனங்கள் மற்றும் வீடுகளைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் பொருட்செலவுகள் ஏற்படலாம். நெருப்பு, கேஸ், வெல்டிங் சம்பந்தமான தொழில்கள் செய்வோர்கள், காவல்துறையினர்கள், இராணுவம் சார்ந்தவர்கள், ஹோட்டல் தொழிற்செய்வோர்கள், விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள், ஆசன யோகப் பயிற்சி கூடங்களை நடத்துபவர்கள், தங்க நகை வியாபாரிகள் ஆகியோர்களுக்கு நல்ல பலன்கள் வந்து சேரும். வீடுகளில் பணம் பொருட்கள் திருட்டுப் போக இருப்பதால் எச்சரிக்கை தேவை. பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும். வட திசையில் இருந்து எதிர்பாராத தன வரத்துகள் உண்டு. வேண்டாத மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு பிரச்சனைகளை விலைக்கு வாங்கி மன நிம்மதியை இழக்க வேண்டாம். மனைவியின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவ செலவுகள் வந்து சேரும். விருந்தினர் வரவால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். அடுத்தவர் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது.பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய்கிழமையில் துர்க்கை வழிபாடு செய்து துவரை தானம் செய்து வரவும்.

3. மிதுனம்:-

மிதுனராசி அன்பர்களே சூரியன் நன்மை தரும் கிரகமாகும். தீராத நாட்பட்ட வழக்குகள் தீர நல்ல முடிவுகள் கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். யாத்திரைகளை விலக்குதல் நல்லது. உறவினர்களிடம் இருந்து தூரத்து நற் செய்திகளை கேட்பீர்கள். திடீர் அதிர்ஸ்டம் ஆகிய ரேஸ் லாட்டரி வழியாகத் தன வரவு உண்டாகும். துலை தூரப் பயணங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். மாணவர்கள், அரசியல்வாதிகள், பொது நலத் தொண்டுகள் செய்பவர்கள், ஆலயப் பணியாளர்கள், மந்திரி பதவிகளை வகிப்பவர்கள், மருந்துப் பொருட்களை விற்பனை செய்வோர்கள், மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், மருந்துப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் கண்ணாடி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள், ஜவுளி மற்றும் நூல் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். வங்கிகளில் இருந்து வரவேண்டிய பணம் மற்றும் வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். பிறருக்காக ஜாமீன் போடுவது சம்பந்தமான விசயங்களில் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக்கிழமையில் சிவ வழிபாடு செய்து கோதுமை தானம் செய்யவும்.

4. கடகம்:-

கடகராசி அன்பர்களே ராகு நன்மை தரும் கிரகமாகும். கை விட்டுப் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும். யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத பிரச்சனைகள் வர இருப்பதால் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லதாகும். உறவினர்களின் வரவால் பொருட்செலவுகள் உண்டாகும். தீர்த்த யாத்திரை சென்று வர முயற்சிப்பீர்கள். புதிய வீடு நிலம் வாங்குவது சம்பந்தமான முயற்சிகளைச் சற்று கால தாமதமாகச் செய்வது நல்லது. சூதாட்ட சம்பந்தமான ரேஸ், லாட்டரி போன்ற விசயங்களில் பணம் மற்றும் பொருட்களை ஏமாற்றம் அடையாமல் இருக்கவும். மனைவி வழிச் சொந்த பந்தங்களால் பொருட்செலவு ஏற்படும். பழைய இரும்பு, பழைய பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், அநாதை விடுதிகளில் இருப்பவர்கள், விஞ்ஞானத் துறையை சார்ந்தவர்கள், மத போதகர்கள், மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். தாயின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டு. பூர்வீகச் சொத்துக்கள் வந்து சேரும். உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை. தந்தையால் பொருள் வரவு உண்டு. குல தெய்வ வழிபாட்டிற்காக வெளியூர் செல்லுவீர்கள். தந்தை மகன் உறவில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்;:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் வழிபாடு செய்து கோதுமை தானம் செய்து வரவும்.

5. சிம்மம்:-

சிம்மராசி அன்பர்களே வியாழன் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். அடுத்தவர்களின் விசயத்தில் தலையிட்டு மன நிம்மதியை இழக்க வேண்டாம். காதல் விசயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் கிடைக்க கூடிய காலமாகும். பூமி நிலம் சம்பந்தமாக வெகு காலமாகத் தடை பட்டு வந்த காரியங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் பெறுவர். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி அடைவர். பூ, பழம், நறுமணப் பொருட்களின் வியாபாரிகள், ஆலயப் பணிகளைச் செய்பவர்கள், அற நிலையத் துறையை சார்ந்தவர்கள், கம்ப்யூட்டர் துறையைச் சார்ந்தவர்கள், அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள், தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், குழந்தைகள் காப்பகங்களை நடத்துபவர்கள், உடல் ஊனமுற்றோருக்கான கல்வி சாலைகளை நடத்துபவர்கள், இன்சினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் துறை சார்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். ஒரு சிலருக்கு புதிய வீடு மற்றும் வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது. திடீர் அதிர்ஸ்டங்கள் மூலமாகப் பொருள் வந்து சேரலாம். காதல் சம்பந்தமான விசயங்களில் எச்சரிக்கை தேவை. காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களின் உதவிகளால் திரும்பக் கிடைக்கும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்;-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வட கிழக்கு
பரிகாரம்:-வியாழக்கிழமையில் சிவ வழிபாடு செய்து கடலை தானம் செய்யவும்.

6. கன்னி:-

கன்னிராசி அன்பர்களே சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கண்களில் கவனம் தேவை. நண்பர்களால் எதிர்பாராத பொருட்செலவுகள் உண்டாகும். தூரத்து யாத்திரைகளில் புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பால் மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ளது. மாமன் வழியின் மூலம் சில நன்மைகளை அடைவார்கள். பொதுநலத் தொண்டுகளில் பிரியமுடன் ஈடுபடுவீர்கள். தீர்த்த யாத்திரை சென்று வர வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். தண்ணீர், கூல்டிரிங்ஸ், திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், உப்பு மற்றும் உர வியாபாரிகள், தாய் சேய் நல விடுதிகளை நடத்துவோர்கள், பொதுப் பணித் துறையினைச் சார்ந்தவர்கள், நீர்வளத்துறை சார்ந்த பணி புரிவோர்களும் நல்ல லாபம் அடைவார்கள். பிறருக்காக உழைப்பதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள். தென் திசையில் இருந்து பெண்களால் எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும். தந்தையின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இட மாற்றம் ஏற்படும். குல தெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது. செய்தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். புதிய ஆடை அணிகலன்கள், ஆடம்பர அலங்கார பொருட்களை வாங்குவீர்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் வழிபாடு செய்து பச்சரிசி தானம் செய்து வரவும்.

7. துலாம்:-

துலாம்ராசி அன்பர்களே புதன் நன்மை தரும் கிரகமாகும். தேவையற்ற விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம். நீண்ட காலமாக வங்கிகளில் இருந்து எதிர்பார்த்து இருந்த கடன் உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ள காலமாகும். நெருப்பு, கேஸ், வெல்டிங் சம்பந்தமான தொழில்களை செய்வோர்கள், விளையாட்டு துறையை சார்ந்தவர்கள், ஆசனயோகப் பயிற்சி கூடங்களை நடத்துபவர்கள் நல்ல லாபம் அடைவார்கள். கணவன் மனைவி உறவுகள் சுமாராக காணப்படும். சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கித் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம் நெருக்கடி ஏற்படுத்தினாலும் சமாளித்து கொள்வீர்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், நாடகக் கலைஞர்கள், இலை, கீரை வகைகள், மருந்துப் பொருட்கள் விற்பனையாளர்கள், தபால் தந்தி துறையை சார்ந்தவர்கள், அச்சு இயந்திர சாலைகளை நடத்துபவர்கள், பேனா, பென்சில் நோட்புக் சம்பந்தமான ஸ்டேசனரி வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். விபரீதமான எண்ணங்களை விட்டுக் காரியத்தில் கவனமாய் இருங்கள். சகோதரர்களால் பொருள் வரவு உண்டாகும். அரசு வேலை மற்றும் உத்தியோக முயற்சிகள் வெற்றி தேடித் தரும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து பாசிப் பயிறு தானம் செய்து வரவும்.

8. விருச்சிகம்:-

விருச்சிகராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டு. உடம்பில் மூலம் மற்றும் உஷ்ண சம்பந்தமான பீடைகள் வந்து தீரும். புதிய நண்பர்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். வேற்று மதத்தவர்களால் எதிர் பாராத ஆதாயங்கள் கிடைக்கும். உடம்பில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமாகிய தொல்லைகள் வந்து போகும். காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருக்கவும். புதிய வீடு மற்றும் நிலங்கள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. மூத்த சகோதரரால் பொருட் செலவுகள் ஏற்படும். தங்க நகைகள் வியாபாரிகள், அரசியல்வாதிகள், காவல் துறையினர்கள், இராணுவம் சார்ந்தவர்கள், ஹோட்டல் தொழிற்செய்வோர்கள், தீயணைப்பு துறையை சார்ந்தவர்கள் ஆகியோர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விவசாயம் செய்வோர்கள் கவனமுடன் செயல்படவும். பழைய வழக்குகள் மீண்டும் தொடரலாம்.
தேவையற்ற மன சஞ்சலமும் குழப்பங்களும் குடும்பத்தில் வரக்கூடும். விருந்திர்னகளின் எதிர்பாராத வரவால் பொருள் விரையமாகும். நீண்ட தூரப் பயணங்களால் மன நிம்மதி ஏற்படாது. சுய தொழில் செய்வதற்கான முயற்சிகளில் சற்று கால தாமதம் ஏற்படலாம். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் எதிர்பாராத தனவரவு உண்டாகும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் வழிபாடு செய்து துவரை தானம் செய்து வரவும்.

9. தநுசு:-

தநுசுராசி அன்பர்களே சனி நன்மை தரும் கிரகமாகும். தொலை தூரப் பயணங்கள் மூலம் எதிர் பார்த்த காரியங்கள் கை கூடும். தெய்வத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்வீர்கள். அரசு சம்பந்தமாகிய வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கச் சற்று காலதாமதம் ஆகலாம். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். வீடுகளைத் திருத்திக் கட்ட எண்ணுவீர்கள்.நெடு நாட்களாக வராத கடன் கொடுத்த பணம் திரும்ப கைவந்து சேரும். இரும்பு, இயந்திரம், இரசாயனம் சம்பந்தமாகிய தொழில்களை செய்வோர்கள், பலசரக்கு, எண்ணை சம்பந்தமான வியாபாரிகள், பழைய பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள், மாமிச உணவுகளின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள். வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளைத் திருத்திக் கட்டவும், வீடு மாற்றம் செய்யவும் எண்ணுவீர்கள் மனைவியின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகும். பழையவாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். தாய்க்கு இருந்து வந்த நோய்கள் குறைந்து காணப்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் எதிர் பாராத ஆதாயங்களும் மன மகிழ்ச்சியும் உண்டாகும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசழயான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து எள் சாதம் தானம் செய்து வரவும்.

10. மகரம்:-

மகரராசி அன்பர்களே கேது நன்மை தரும் கிரகமாகும். வெளி நாட்டில் வசிப்பவர்கள் தனது தாய் நாட்டிற்குச் சென்று வர வாய்ப்புகள் உள்ளன. பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் சற்று குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியம் கை கூடும். யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்களைச் சந்திப்பதன் மூலம் சில காரியங்களை நிறை வேற்றுவீர்கள். பிள்ளைகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் பண வரவு உண்டு. தீர்த்த யாத்திரை சென்று வருவதற்கான ஏற்பாடுகளில் சற்று கால தாமதம் ஏற்படும். நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். வங்கிகள் மூலம் எதிர் பார்த்த கடன் உதவிகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம். பழைய இரும்பு, பழைய இயந்திரம்,இரசாயன சம்பந்தமான தொழிற்செய்வோர்கள், விஞ்ஞானத் துறையினை சார்ந்தவர்கள், மத போதகர்கள், மடாதிபதிகள், கழிவுபொருட்களை ஏற்றுமதி இறக்குமதிகளை செய்வோர்கள், மின்னணு ஆராய்ச்சி துறையை சார்ந்தவர்கள், மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவு பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்களுக்கு நல்ல லாபம் அடைவார்கள். புதிய வீடு,நிலம்,வாகனம் போன்றவற்றை மற்றவர்களின் உதவிகளோடு வாங்குவீர்கள். சேர் மார்க்கெட் தொழிற்செய்வோர்கள் லாபம் அடைவார்கள். நீண்ட காலமாகப் பிரச்சனைகளில் இருந்து வந்த குடும்பச் சொத்துக்கள் கிடைக்கும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்யவும்.

11. கும்பம்:-

கும்பராசி அன்பர்களே புதன் நன்மை தரும் கிரகமாகும். விவசாயம் செய்வோர்கள் விவசாயத்தில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது. அரசியல்வாதிகளால் ஆதாயம் இருக்காது. புதிய நண்பர்கள் சேர்க்கையால் மன நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகளின் மருத்துவ செலவுகளுக்காக பொருட் செலவுகள் உண்டாகும். பிறரிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடையாமல் இருக்கவும். விருந்தினர் வரவால் மனமகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இட மாற்றம் ஏற்படும். பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உடம்பில் நரம்பு,எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். பூர்வீக இடத்தை விட்டுப் பெயர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம் சுமாராக காணப்படும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாக பேசிப் பழகுதல் நல்லது. இலை, கீரை வகைகள், மருந்துப் பொருட்கள், தபால் தந்தித் துறையைச் சார்ந்தவர்கள், அச்சு இயந்திரசாலைகள் நடத்துபவர்கள், பேனா ,பென்சில் நோட்புக் சம்பந்தமான ஸ்டேசனரி வியாபாரிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், நாடக கலைஞர்ள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் குடும்பத்தில் மன மகிழ்ச்சி உண்டாகும். கூட்டுத் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து பாசிப்பயிறு தானம் செய்து வரவும்.

12. மீனம்:-

மீனராசி அன்பர்களே சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி உறவுகள் பலப்படும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் விபரீதங்களைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். ரேஸ், லாட்டரி போன்ற தி அதிர்டம் மூலம் பணம் வந்து சேரும். உடம்பில் வாதம் வாயு மற்றும் எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.சொத்துக்கள் சம்பந்தமான விசயங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்க இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம். சகோதர சகோதரிகளுடன் காரணமில்லாத சச்சரவுகள் வந்து போகும். கண்களில் கவனமுடன் இருத்தல் நல்லதாகும். விவசாயம் செய்வோர்கள் மிகுந்த கவனமுடன் இருக்கவும். துலை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லதாகும். கட்டிட சம்பந்தமான பொருட்களாகிய செங்கல், மண், மணல், சிமிண்ட் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள், உணவு தானியங்கள்மற்றும் பயிறு, பருப்பு போன்ற பொருட்களின் வியாபாரிகள், வீடு நிலங்கள் வாங்குவோர் விற்போர்கள், கட்டிட சம்பந்தமான தரகு ஏஜண்ட் தொழில்களைச் செய்வோர்கள், இனிப்புத் தின் பண்ட வியாபாரிகள், அழகு சாதனப் பொருள் வியாபாரிகள், சினிமா, நாடகம் போன்ற துறையினைச் சார்ந்தவர்கள் ஆதாயம் பெறுவார்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு.
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து மொச்சைப் பயறு தானம் செய்யவும்.

தொடரும்!

About The Author