அந்திபோர் அழுகுரல்

காவாவென கெஞ்சிடும் கிள்ளைகள்
ஆவாவென கூவிடும் கிள்ளைகள்
ஊ ஊவென விரைந்திடும் இளமாருதம்
சோ சோ வென பெய்திடும் மழையினிற்
ஹோ ஹோ வென இறைந்திடும் விண்ணகம்
மறைந்த தாயை
வா வா வென அழுது விளித்திடும்
பிள்ளையை
நாலாபுறம் சூழ்ந்து திரண்டு
மண்ணகம் இறங்கி
காத்திட இரங்கிடும்

போர் முழக்கங்கள் இன்னும் முடியுறா நிலையில்

***

About The Author