அனாடமிக் தெரபி (29)

வைட்டமின் குறைபாடுகளும் பாதிப்புகளும்:

இரத்தத்தில் உள்ள சர்க்கரை, கால்சியம், சோடியம், அயோடின், கொழுப்பு ஆகிய பொருட்களின் தரம் குறைந்தால் என்னென்ன நோய்கள் வரும் என்பதை இதுவரை பார்த்தோம்.

இதே போல் இந்த வாரம், சில வைட்டமின்கள் குறைவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிப் பார்ப்போம்!

இரத்தத்தில் வைட்டமின் ‘ஏ’-வின் தரம் குறைந்து போனால் கண்ணில் நோய் ஏற்படும். ஏனென்றால், கண் சாப்பிடும் உணவு வைட்டமின் ‘ஏ’. உடனே, வைட்டமின் ‘ஏ’-வின் தரம் குறைந்தால் கண் மட்டும்தான் கெட்டுப்போகும் என நினைத்து விடக்கூடாது. இதனால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நோய் வரும். ஏனென்றால் அனைத்து உறுப்புகளுக்கும் வைட்டமின் ‘ஏ’ தேவைப்படுகிறது. ஆனால், கண்கள் மட்டும் சற்று அதிகமாக வைட்டமின் ‘ஏ’-வை எடுத்துக் கொள்கின்றன. எனவே, நோய் முதலில் கண்களில் தெரியும்.

இதே போல, இரத்தத்தில் உள்ள வைட்டமின் டி-யின் தரம் குறைந்து போனால் எலும்புகளில் நோய் ஏற்படும். மூட்டு வலி, முழங்கால் வலி, மூட்டு வாதம் (Arthritis) போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் அடிப்படைக் காரணம் இரத்தத்தில் வைட்டமின் டி-யின் தரம் குறைந்து போவதே. எனவே, எலும்புகளில் வலியும், வேதனையும் ஏற்படும்பொழுது முதுகெலும்பு ஆபரேசன், மூட்டு எலும்பு ஆபரேசன் என எதைச் செய்தாலும், மருந்து தடவினாலும் எதுவும் நடக்காது. இரத்தத்தில் உள்ள வைட்டமின் டி-யின் தரத்தை உயர்த்துவது மூலமாக மட்டுமே எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும். வைட்டமின் ஏ-வைப் போலவே, வைட்டமின் டி-யும் உடல் முழுவதும் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தேவைப்படுகிறது. ஆனால், எலும்புகளில்தான் அதிகமாகத் தேவைப்படுகிறது என்பதால் எலும்பு முதலில் கெட்டுப் போகிறது.
இரத்தத்தில் வைட்டமின் பி-யின் தரம் குறைந்தால் தசை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் வரும். உடம்பு வலி, சோர்வு, குத்தல், குடைச்சல், எரிச்சல் ஆகிய சதை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்துக்கும் இதுவே அடிப்படைக் காரணம். இரத்தத்தில் உள்ள வைட்டமின் பி-யின் தரத்தை உயர்த்துவதன் மூலமாக சதை சம்பந்தப்பட்ட எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும்.
இது போல, வைட்டமின் ‘கே’ தரம் குறைந்தால் இரத்தம் உறையும் தன்மையை இழந்து விடும். பொதுவாக, உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டால் இரத்தம் வெளியே வந்தவுடன் உறைந்து விடும். இதனால், இரத்தச் சேதத்தால் உயிரிழப்பு ஏற்படாமல் காப்பாற்றப்படுகிறோம். ஆனால் இரத்தத்தில் வைட்டமின் கே-யின் தரம் குறைந்தால் இரத்தம் உறையாது. இது உயிருக்கே ஆபத்து! இரத்தத்தில் உள்ள வைட்டமின் கே-யின் தரத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமாக இதை நாம் குணப்படுத்திக் கொள்ளலாம்.

இப்படி இரத்தத்தில் நிறையப் பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு பொருளின் தரம் குறையும்பொழுதும் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கும். குறிப்பிட்ட பொருள் எந்த உறுப்புக்கு அதிகமாகத் தேவைப்படுகிறதோ அந்த உறுப்பு அதிகமாக பாதிக்கப்படும்.

வலி என்பது என்ன?

ஒரு பெரிய பங்களா வீடு. அதன் எல்லா ஜன்னல்களும் கதவுகளும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த வீட்டின் உள்ளே தீப்பிடித்து எரிகிறது. நீங்கள் வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கிறீர்கள். உள்ளே எரியும் தீ உங்கள் கண்ணுக்குத் தெரியாது. காரணம், அனைத்து ஜன்னல்களும் கதவுகளும் நன்றாக அடைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு ஜன்னல் மட்டும் இலேசாகத் திறந்திருக்கிறது. இப்பொழுது அந்த ஜன்னல் வழியாகப் புகை வரும். இதனால், அந்த ஜன்னல் மட்டும்தான் பற்றிக்கொண்டு விட்டது என அர்த்தமா? கிடையாது. வீடு முழுவதும் பற்றி எரிகிறது. அதன் அடையாளம்தான் அந்தப் புகை. நீங்கள் அந்த ஜன்னலை அடைத்து வைப்பது மூலமாகப் புகையை வெளியில் வராமல் தடுக்கலாம். அதனால், அந்தப் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று கூற முடியுமா?

இந்த எடுத்துக்காட்டைப் புரிந்து கொண்டால் உலக வைத்தியத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
உடல் முழுவதும் பற்றி எரியும்பொழுது ஏதாவது ஒரு உறுப்பின் வழியாக வரும் புகைதான் வலி! உடல் முழுவதும் பற்றி எரியும்போது ஏதாவது ஓர் உறுப்பு வழியாக, அதாவது எந்த உறுப்பு மிகவும் பலவீனமாக இருக்கிறதோ அந்த உறுப்பு வழியாக அதன் பாதிப்பு வெளிக்காட்டப்படும். எனவே, தலைமுடி முதல் உள்ளங்கால் வரை உடலிலுள்ள எந்த உறுப்பில் எப்பொழுது நோய் வந்தாலும், நாம் அந்த உறுப்பில் ஆராய்ச்சி செய்வதால் எந்தப் பயனும் கிடையாது. உடல் முழுவதும் பற்றி எரிகிறது. அதனால் அந்த உறுப்பில் புகை வருகிறது என்று புரிந்துகொண்டு உடல் முழுவதும் பற்றியுள்ள தீயை அணைப்பதற்கு வழி தேட வேண்டுமே தவிர புகையை அணைப்பதற்கு முயலக்கூடாது.

இப்படித்தான் உலக வைத்திய முறைகள், குறிப்பிட்ட இடத்தில் நோய் இருக்கிறது என்று அந்தப் புகையை அணைப்பதற்கே வாழ்க்கை முழுவதற்கும் மருந்து, மாத்திரை கொடுக்கிறார்கள். ஆனால், உடல் முழுவதும் எரியும் நெருப்பை அணைப்பதற்கு எந்த வைத்தியமும் முயற்சி செய்வது கிடையாது.

எனவே, எந்த உறுப்பில் எந்த நோய் வந்தாலும் நோய் அந்த உறுப்பில் இல்லை; அது வெறும் புகைதான் என்பதைப் புரிந்து கொண்டால் நம் உடலில் வரும் நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ள சுலபமாக இருக்கும்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author