அழகழகாய்…இருமுகம்…

அன்பானவளின்
கால் பட்டு சிதறும்
மழை நீர் முத்துக்களில்
தொலைகிற என் முகம்
கரைந்து
நொறுங்கி
இடறி சிதறி
காணாமல் போகிறது

தேடிப்பார்ப்பேன்
பார்வை வீசி
அவள் பாதம் வரையிலும்

மழை நின்று
மிதமாய்
குளிர் குடியேற
குதிக்கிறாள் அவள்
அடடா..!!!

இருவரின் முன்பு
புதிதாய்
தேங்கிய நீர் குட்டை
தெளிவாய் தெரிகிறது
தொலைந்து போன
என் முகம்
முன்னை விட அதிக பிரகாசமாய்

தோள் சாய்ந்து
சந்தோசத்தில்
அவள் முகம்
அழகாய்…
அழகழகாய்…

About The Author