இராசிபலன்கள் (1-6-2009 முதல் 7-6-2009 வரை)

மேசம்:-

மேசராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் காரணம் இல்லாத விஷயங்களுக்காக வீண் பிரச்சனைகள் வந்து போகும். தீர்த்த யாத்திரை சென்று வரப் போட்டிருந்த திட்டங்களில் சில தடைகள் வந்து விலகும். புதிய ஆடைகள் அணிகலன்கள் வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளால் இருந்து வந்துள்ள தொல்லைகள் சற்று குறைந்து காணப்படும். நண்பர்கள் உறவினர்களின் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. அடிமை ஆட்களால் ஆதாயம் இல்லை. புதிய தொழில் துவங்குவதற்கான முயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தந்தையின் உடல் நிலை பாதிப்புகளால் பொருட்செலவுகள் ஏற்படலாம். மீன், முட்டை, மாமிசம் போன்ற பொருட்கள், காய்கறிகள், கீரைகள், தின்பண்டங்கள் போன்ற வியாபாரிகளும், கட்டில் மெத்தை போன்ற ஆடம்பரப் பொருள் வியாபாரிகளும் நற்பலன் அடைவார்கள்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் வழிபாடு செய்து வரவும்.

ரிசபம்:-

ரிசபராசிஅன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். பொழுது போக்கு விஷயங்களுக்காக வீண் பணச் செலவுகள் ஏற்படலாம். ரேஸ் லாட்டரி போன்ற விஷயங்களில் பணம் கிடைக்கலாம். சகோதரர்களால் சம்பந்தமில்லாத பிரச்சனைகளும், மனக் குழப்பங்களும் வந்து சேரும். புதிய கடன்களை வாங்குவதால் திருப்பிச் செலுத்த இயலாமற் போகக் கூடும் என்பதால் கடன் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது. புதிய செய்தொழில் சம்பந்தமாகிய முயற்சிகளில் சிறிது தடைகள் வந்து விலகும். கணவன் மனைவி உறவுகளில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லதாகும். தந்தை வழிச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும். தனப் புழக்கம் சுமாராகக் காணப்படும். உடல் நிலையில் உஷ்ணம் மேகம் போன்ற உபாதைகள் வந்து போகலாம். பூர்வீகமான இடங்களுக்குச் சென்று வரப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறக் கூடிய காலமாகும். பேப்பர், பேனா, பென்சில் நோட்டு புத்தகம் போன்ற ஸ்டேசனரி சம்பந்தமாகிய பொருள் வியாபாரிகள், வங்கிப் பணி புரியும் எழுத்தர்கள், வழக்கறிஞர்கள், ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்:-

மிதுனராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். மாணவர்களுக்கு கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுகளும், பண உதவியும் கிடைக்கும். உடல் நிலையில் கண், காதுகளில் கவனமுடன் இருக்கவும். நீண்ட காலமாக வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை கிடைக்கும். மன தைரியமுடன் எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவது போன்ற முயற்சிகளில் சற்று கால தாமதம் ஏற்படலாம். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளில் ஏற்பட்டு இருந்த தடைகள் நீங்கும். பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் மாறி ஓரளவு முன்னேற்றம் காணப்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளில் மன திருப்தி அடைவீர்கள். நெருப்பு, மின்சாரம் போன்ற துறையைச் சார்ந்தவர்கள், கம்ப்யூட்டர் சாதன வியாபாரிகள், இணையதளங்கள் நடத்துபவர்கள், கேஸ், வெல்டிங் போன்ற தொழிற்சாலைகளில் பணி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலனை அடைய வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

கடகம்:-

கடகராசி அன்பர்களே சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய வீடு வாகனங்கள் வாங்குவது போன்ற புதிய முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் சற்று கால தாமதம் ஏற்படும். குழந்தைகளுக்கான மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். நீண்ட தூரப் பயணங்கள் மூலமாக எதிர்பார்த்த காரியங்களில் சில பின்னடைவுகள் ஏற்படும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சற்று குறைந்து காணப்படும். உடல் நிலையில் வாயு மற்றும் வயிற்று சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். கட்டிட சம்பந்தமாகிய செங்கல், மணல், சிமிண்ட் வியாபாரிகள், டீசல், பெட்ரோல், எண்ணை வியாபாரிகள், இன்சினியரிங் துறை சார்ந்தவர்கள், கமிசன் தொழிற்செய்வோர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். மற்றவர் விஷயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு மன நிம்மதியை இழக்காதீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து நண்பர்களால் பொருளுதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

சிம்மம்:-

சிம்மராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளுக்கு வெகு காலமாக தடை பட்டு இருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெறக் கூடிய காலமாகும். விவசாயம் செய்பவர்கள் எதிர்பாராத நல்ல ஆதாயங்களை அடைவார்கள். கோர்ட் வழக்கு விஷயங்களில் முடிவுகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகும். கணவன் மனைவி உறவுகளில் சில கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். காதல் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. நெருப்பு மின்சாரம் போன்றவற்றில் கவனமுடன் இருப்பது நல்லது. வீட்டைத் திருத்திக் கட்டுவதற்காக நீண்ட நாட்களாக எடுத்துக் கொண்ட முயற்சிகள் நிறைவேறும். தீர்த்த யாத்திரை சென்று வருவதற்காகப் புதிய கடன்களை வாங்கி அடைப்பீர்கள். திருட்டுப் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். பிரிண்டிங், புத்தகம், பேப்பர், மற்றும் ஸ்டேசனரி போன்ற தொழிற் செய்வோர்கள், வட்டித் தொழில்கள், அரசுத் துறை சார்ந்த எழுத்துப்பணி செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். பொதுத் தொண்டுகளில் எச்சரிக்கையுடன் பணியாற்றுவது நல்லது.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும்.

கன்னி:-

கன்னிராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரகமாகும். யாத்திரையில் அரசியல் வாதிகள் சிலரின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளுடன் கவனமுடன் நடந்து கொள்வதால் வீண் பிரச்சனைகள் குறையும். ஒரு சிலருக்கு நினைத்த இடங்களில் பணி இட மாற்றம் ஏற்படலாம். காதல் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழிற்சாலைகளைத் திருத்தி அமைக்கப் போட்ட திட்டங்களில் வெற்றி அடையலாம். இரும்பு, இயந்திரம், இரசாயனம், கலைத்துறை, பத்திரிக்கை போன்ற வியாபாரிகளும் இவற்றில் பணி புரிபவர்களும் லாபம் அடைவார்கள். விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணங்கள் மூலம் இது நாள் வரை தீராத நோய்களுக்கு விடை காணுவீர்கள். அரசு வழக்கு சம்பந்தமாகிய விஷயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். வேற்று மதத்தவரால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். காணாமற் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரக் கூடும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் விநாயகர் வழிபாடு செய்து வரவும்.

துலாம்:-

துலாம்ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் ஆரம்பம் செய்யப் போட்டிருந்த எண்ணங்கள் நிறைவேறும். குல தெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லதாகும். உடம்பில் வாயு மற்றும் வாதம் போன்ற உபாதைகள் வந்து போகலாம். வெகு காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியங்கள் நிறைவேறும். பழைய பொருட்களை விற்றுப் புதிய பொருட்களை வாங்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் நன் மதிப்பையும் பாராட்டுக்களையும் பெறுவார்கள். மனைவியின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் சற்று குறைந்து மன நிம்மதி அடைவீர்கள். நண்பர்கள் உறவினர்களின் ஆதரவால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். கேஸ், வெல்டிங், இரசாயனம், கம்ப்யுட்டர் போன்ற தொழில் செய்வோர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். புதிய வீடு மாற்றம் செய்ய போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறும் திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனம் வந்து சேரும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்:-

விருச்சிகராசி அன்பர்களே, உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். சொந்த பந்தங்களுடன் குடும்பத்தில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள மனக் கசப்புகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். மற்றவர்களின் பிரச்சனைகளில் அநாவசியமாகத் தலையிட்டு மனக் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். பங்குத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் ஈடு பட்டுப் புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். வெகு காலமாகத் திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கித் திருமணம் ஆகும். திடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலம் தனம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பூஜைப் பொருட்கள், நறுமண சம்பந்தமாகிய பொருட்கள், கம்ப்யுட்டர் சாதன வியாபாரிகள், பேராசிரியர்கள், ஆலயப்பணி செய்வோர்கள், தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், அநாதை ஆசிரமங்கள் நடத்துவோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். தாயின் உடலில் இருந்து வந்துள்ள பாதிப்புகள் சற்று குறைந்து மருத்துவச் செலவுகள் குறையும். தந்தை மகன் உறவுகளில் நல்ல சூழ்நிலை காணப்படும். யாத்திரையில் கவனம் தேவை.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

தநுசு:-

தநுசுராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். புதிய மருத்துவர்களின் உதவியால் நோய்கள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள். நீண்ட நாட்களாக வராத கடன் கொடுத்திருந்த பணம் பிரச்சனைகளின் பேரில் திரும்பக் கிடைக்கும். தண்ணீர், கூல்டிரிங்ஸ், மற்றுள்ள குளிர் பானங்கள், காய்கறி வியாபாரிகள், மர வியாபாரம் செய்பவர்கள் நீர்வளத்துறை சார்ந்தவர்கள், மருத்துவத் துறை சேர்ந்தவர்கள், மருந்து விற்னையாளர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவீர்கள். எடுத்துக் கொண்ட காரியங்களை மிகுந்த முயற்சியின் மேல் செய்து முடிப்பீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் இன்னும் சற்று நீடிக்கும். பிறருக்காக உதவி செய்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த தொல்லைகள் சற்று குறைந்து காணப்படும். தீராத நோய்க்கு வங்கிகள் மூலமாக எதிர் பார்த்து இருந்த பணம் கை வந்து சேரும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறைந்து ஓரளவு மன மகிழ்ச்சி அடையலாம். உத்தியோகத் துறையினர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றம் ஏற்படலாம். கண் காதுகளில் கவனம் தேவை.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக் கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.

மகரம்:-

மகரராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வழக்கு விஷயங்களில் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்க இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம். ரேஸ் லாட்டரி போன்ற விஷயங்களில் ஏமாற்றம் அடைய வேண்டாம். தூரத்து உறவினர்களின் வருகையால் சில சுப காரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உடல் நிலையில் மேகம் உஷ்ண சம்பந்தம் ஆகிய உபாதைகளும், அலர்ஜி போன்ற தொற்று நோய்களும் வந்து நீங்கும். நாட்பட்ட பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன் வாங்க முயற்சிப்பீர்கள். வாகனங்களில் எச்சரிக்கையுடன் பயணம் செய்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். தேவையற்ற புதிய நண்பர்களின் தொடர்புகளால் மன நிம்மதி குறைய இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். மனைவியின் உடல் நலக் குறைவு காரணமாக பொருட் செலவுகள் உண்டாகும். தொலைதூரப் பயணங்களைத் தவிர்த்தல் நல்லதாகும். சினிமா, நாடகம், இசைத் துறை சார்ந்தவர்களும், வங்கிப் பணி செய்வோர்களும், எழுத்தாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

கும்பம்:-

கும்பராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். கலைத்துறை சார்ந்த பொருள்களின் வியாபாரிகள், ஆடம்பர அலங்கார பொருள் வியாபாரிகள், தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், கமிசன்தொழிற் செய்வோர்கள், வீடு நிலம் போன்ற விற்பனையாளர்கள் ஆகியோர்கள் ஆதாயம் அடைவார்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் சற்று குறைந்து மன நிம்மதி ஏற்படும். பொது நலக் காரியங்களில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். பூர்வீகமான இடங்களுக்குச் சென்று வர வாய்ப்பு உள்ளது. பிரிந்து போன கணவன் மனைவி உறவுகளில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒன்று சேரக் கூடிய காலமாகும். செய்தொழிலில் நல்ல லாபம் கிடைத்த போதிலும் சில பிரச்சனைகள் வந்து மிகுந்த பிரயாசத்தின் மேல் சரி செய்து விடுவீர்கள். நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவும் உண்டாகலாம். அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. உயரமான இடங்களில் மிகுந்த கவனமுடன் வேலை செய்வது நல்லது. விபரீதமான எண்ணங்களை நினைத்து வீண் மனக் குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
புரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

மீனம்:-

மீனராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். நாட்பட்ட தீராத நோய்க்கு விடை காணும் காலமாகும். அண்டை அயலாருடன் எச்சரிக்கையாகப் பேசிப் பழகுதல் நல்லது. புதிய வீடு மற்றும் தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. குல தெய்வ வழிபாடு செய்து வர முயற்சித்த எண்ணங்கள் நிறைவேறும். அரசியல் வாதிகளால் சில எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள். நண்பர்கள் உறவினர்களின் வருகையால் பண உதவியும் மன நிம்மதியும் உண்டாகும். வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்காக வங்கிகளில் இருந்து எதிர் பார்த்து இருந்த பண உதவிகள் கிடைக்கும். நீண்டதூரப் பயணங்களால் எதிர் பார்த்து இருந்த ஆதாயம் கிடைப்பதில் சற்று கால தாமதம் ஏற்படும். புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். மன நிம்மதி இன்மை காரணமாக நித்திரை பங்கமும் காலந்தாழ்ந்த உணவருந்துதலும் ஏற்படும். பலசரக்கு, இரும்பு மின்சாரம் இரசாயனம், விஞ்ஞானம், எண்ணைகள் போன்ற வியாபாரம் செய்பவர்களும் அரசுத்துறை சார்ந்த அலுவலக பணி ஆற்றுபவர்களும் நற்பலனை அடைவார்கள்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

**************

Gnanayohi Dr. P. Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627 759
Tirunelveli District, Tamil Nadu, India.
Phone : 04633-243029,
Mobile: 98425-10578, 98425-29691,
Fax: 04633 -240390
Website:- www.gnanayohi.com

About The Author