இராசிபலன்கள் (6-4-2009 முதல் 12-4-2009 வரை)

மேஷம்:-

மேஷராசி அன்பர்களே! செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் குழப்பங்கள் மாறி மிகுந்த ஒற்றுமை உண்டாகும். நிலக்கரி, பெட்ரோல், டீசல், பலசரக்கு, எண்ணை போன்ற தொழிற் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து போகலாம். உத்தியோகத் துறையினர்களுக்கு மேலதிகாரிகளுடன் வீண் மன சஞ்சலமும், பதவி இட மாற்றமும் ஏற்பட இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்த்துப் பொறுப்புடன் பணி ஆற்றவும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த வர வேண்டிய பணம் திரும்பக் கைக்கு வந்து சேரும். உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் இல்லை. சமுதாய முன்னேற்றம், அநாதை ஆசிரமங்கள் மற்றும் பொதுத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணி ஆற்றுவதன் மூலம் மன நிம்மதியும் பெயர், புகழும் அடைவீர்கள்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம்:-

ரிஷபராசி அன்பர்களே! சனி நன்மை தரும் கிரகமாகும். காதல் விஷயத்தில் எதிர்பார்த்து இருந்த தகவல்கள் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். குடும்பச் சொத்துக்களில் ஏற்பட்டு இருந்த வழக்குகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். யாத்திரையில் புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். வங்கிகளின் மூலமாக எதிர்பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். தண்ணீர், கூல்டிரிங்ஸ், ஐஸ், குளிர்சாதனப் பொருட்கள் போன்ற வியாபாரிகள், ஆலயப் பணி புரிவோர்கள், அறநிலையத் துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். திடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ், லாட்டரி ஆகியவற்றின் மூலம் பண வரவு உண்டாகும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். பிள்ளைகளின் சுப காரிய நிகழ்ச்சிகளில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும். வெளி நாட்டு விஷயங்களில் வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டு.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்:-

மிதுனராசி அன்பர்களே! ராகு நன்மை தரும் கிரகமாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்து இருந்த இட மாற்றம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். உடல் நிலையில் நரம்பு எலும்பு போன்ற உபாதைகள் வந்து போகும். மஹான்களின் தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள். விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தால் வீண் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். யாத்திரையில் மிகுந்த கவனமுடன் சென்று வருவது நல்லது.திடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலம் பணம் வர வாய்ப்பு உள்ளது. உணவுப் பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி தொழிற் செய்வோர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், அரசுத் துறை சார்ந்த ஆலயப் பணியாளர்கள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் வழிபாடு செய்து வரவும்.

கடகம்:-

கடகராசி அன்பர்களே! சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் மன நிம்மதியும் பொருள் வரவும் உண்டாகலாம். தந்தை மகன் உறவுகளில் சுமூகமான சூழ்நிலை உருவாகும். பூ, பழம், ஜவுளி நூல் போன்ற வியாபாரிகள் கலைத்துறை சார்ந்த பேராசிரியர்கள், இவற்றில் பயின்று வரும் மாணவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். நீண்ட காலமாகத் தடைபட்டு வந்த குல தெய்வ வழிபாடுகளை செய்து வருவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு நல்லதொரு முடிவு கிடைக்கும். வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீடு, நிலம் வாங்குவது சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தீராத நோய்களுக்கு புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்க கூடிய காலமாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். வங்கிகளில் இருந்து எதிர் பார்த்த பணம் கை வந்து சேரும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை-கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்:-

சிம்மராசி அன்பர்களே! சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பழமையான கட்டிடங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட்செலவுகள் ஏற்படலாம். காதல் விஷயத்தில் அனுகூலம் ஏற்படாது. தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். பழைய கடன்களை அடைப்பதற்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரலாம். புதிய வீடு நிலம் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர் பார்த்து இருந்த கடன் கேட்ட பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். பெண்களால் தென்திசையில் இருந்து எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். காண்டிராக்ட், கமிஷன், தரகு, ஏஜன்சி போன்ற தொழிற் செய்வோர்கள், வட்டிக் கடை நடத்துபவர்கள், தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் ஆகியோர்கள் ஆதாயம் பெறுவார்கள்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

கன்னி:-

கன்னிராசி அன்பர்களே! புதன் நன்மை தரும் கிரகமாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடம்பில் அலர்ஜி மற்றும் சளி சம்பந்தமாகிய உபாதைகள் வந்து போகும். அரசியல்வாதிகளால் ஆதாயம் ஏற்படாது. குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் சம்பந்தமாகிய பேச்சு வார்த்தைகளில் நல்லதொரு முடிவுகள் கிடைக்கும். தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் மூலமாக மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். குல தெய்வ ஆலயத் திருப்பணிகளுக்கான விஷயங்களில் பணி ஆற்றுவதன் மூலம் நற்பெயர் புகழ் ஏற்படும். நீண்ட காலமாக தீர்க்கப்படாத அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் வந்து சேரும். கட்டிட சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள், கட்டில், மெத்தை, ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள் லாபம் அடைவார்கள். நீண்டதூரப் பயணங்களின் மூலமாக எதிர்பார்த்த பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

துலாம்:-

துலா ராசி அன்பர்களே! சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். யாத்திரையில் புதிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற்சில ஆதாயம் அடைவீர்கள். சகோதர சகோதரிகளின் தடை பட்ட திருமண காரியங்கள் நிறைவேறும் காலமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும். மனைவிக்கு சிற்சில மருத்துவச் செலவுகள் செய்வதற்காகப் புதிய கடன்களை வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம். வங்கிகளின் மூலம் எதிர்பார்த்து இருந்த உதவித் தொகைகள் கிடைக்கும். ஸ்டேசனரி பொருட்கள், நறுமணப் பொருள் வியாபாரிகள், ஏற்றுமதித் தொழிற் செய்வோர்கள், மிசினரி சம்பந்தமாகிய உதிரி பாகங்களை விற்பனை செய்வோர்கள், இசைத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து மீண்டும் ஒன்று சேரக் கூடிய காலமாகும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கட் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்:-

விருச்சிகராசி அன்பர்களே! சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். அடிமை ஆட்களால் வீண் பொருள் விரையமும் மன உளைச்சலும் உண்டாகும். கலைப் பொருட்கள் விற்பனையாளர்கள், கலைத்துறை சார்ந்த கலைஞர்கள், தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், உணவுக் கூடங்கள் நடத்துபவர்கள் ஆகியோர்கள் நல்ல பலன் அடைய வாய்ப்பு உள்ளது. தந்தை மகன் உறவுகளில் பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் காணப்படும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து காணப்படும். ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாகப் பணம் பொருள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும். மற்றவர்களின் விஷயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். கூட்டுத் தொழிற் செய்வோர்கள் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுப் பயனடைவார்கள்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென் கிழக்கு
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

தனுசு:-

தனுசுராசி அன்பர்களே! செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். தங்கம், செம்பு, வெள்ளி போன்ற உலோகப் பொருள் வியாபாரிகள், மருந்துப் பொருட்கள் விற்பனை செய்வோர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள். கோர்ட் வழக்கு விஷயங்களுக்காக புதிய வழக்கறிஞர்களின் உதவியை நாடி அவர்களால் நன்மை அடைவீர்கள். பிள்ளைகளால் சில தொல்லைகள் வந்து சேர இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லது. தடைபட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் சம்பந்தமாகப் புதிய தொடர்புகள் ஏற்பட்டு அதன் மூலம் நன்மை அடைவீர்கள். திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம். பொருளாதார சம்பந்தமாகத் தொலைதூரப் பயணங்களை மேற் கொண்டு வெற்றி பெறுவீர்கள். குல தெய்வ ஆலயத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்து நற்பெயர் எடுப்பீர்கள். உடம்பில் தலை மற்றும் முதுகுவலி போன்ற சில உபாதைகள் வந்து போகலாம்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும்.

மகரம்:-

மகரராசி அன்பர்களே! வியாழன் நன்மை தரும் கிரகமாகும். குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்கள் சென்று வர முயற்சிப்பீர்கள். திருட்டுப்போன பொருட்கள் காவல் துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். நீண்ட காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு நண்பர்கள், உறவினர்களின் உதவியால் திருமணம் நடை பெற வாய்ப்பு உள்ளது. புதிய வீடு வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்யப் போட்டிருந்த திட்டங்களில் சற்றுப் பின்னடைவு ஏற்படலாம். பூர்வீகச் சொத்துக்கள் கை வந்து சேரக் கூடிய காலமாகும். அரசு வழக்கு விசயங்களில் எதிர் பார்த்து இருந்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது. வெகு காலமாகக் கட்டப் படாத ஆலயத் திருப்பணிகளுக்கான பணிகளை செய்வீர்கள். இரும்பு. இயந்திரம், இரசாயனம், கம்ப்யூட்டர், கணிதம், எழுத்துத்துறை போன்ற தொழிற் செய்வோர்கள் ஆதாயம் அடைவீர்கள்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக் கிழமையில் தட்சிணா மூர்த்தி வழிபாடு செய்து வரவும்.

கும்பம்:-

கும்பராசி அன்பர்களே! புதன் நன்மை தரும் கிரகமாகும். சூதாட்டங்களில் பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் எச்சரிக்கையுடன் இருக்கவும். சமுதாய முன்னேற்றத்திற்கான பொது நலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள்.பொருளாதாரம் சுமாராகக் காணப்படும்.வேற்று மதத்தவர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் சில ஆதாயங்களை அடைவீர்கள். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள். வர வேண்டிய கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் வந்து சேரும்.ஆடம்பர அலங்காரப் பொருட்கள், கட்டில் மெத்தை போன்ற பொருட்கள் வியாபாரம் செய்வோர்கள், இன்சினியரிங் துறை சார்ந்தவர்கள், கம்ப்யூட்டர் சாதன வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். குடும்பச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். உற்றார் உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வருதல் நல்லது.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு மற்றும் ஆஞ்சனேயர் வழிபாடு செய்து வரவும்.

மீனம்:-

மீனராசி அன்பர்களே! கேது நன்மை தரும் கிரகமாகும். சினிமா, நாடகம் போன்ற கலைத்துறை சார்ந்தவர்கள், கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் இவற்றில் பணிபுரிவோர்கள், கலைப் பொருட்களை விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். காதல் விஷயங்களில் மிகுந்த கவனமுடன் இருப்பதால் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். வெளிநாடு சென்று வர வெகு காலமாகப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும். அநாதைச் சிறுவர்களுக்காக உதவுவதில் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்டிருந்த எண்ணங்கள் நிறைவேறும். உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை. பூர்வீக சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகள் தீர இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். மாணவர்களுக்கு கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கக்கூடும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி வழிபாடு செய்து வரவும்.

**************

Gnanayohi Dr. P. Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627 759
Tirunelveli District, Tamil Nadu, India.
Phone : 04633-243029,
Mobile: 98425-10578, 98425-29691,
Fax: 04633 -240390
Website:- www.gnanayohi.com

About The Author