எழுதக் கூடாத கடிதம் (1)

அன்பே

கோடி கோடியாய்ச்
சொற்களைச் சுரந்து
உன்முன்
கொட்டிக் கொட்டி
நான்
பேசித் தீர்த்திருக்கிறேன்

இருந்தும்
நான்
இடைவிடாமல் கையாண்ட
ஒரே ஒரு சொல்மட்டும்
என்னால்
மௌனமாகவே
உச்சரிக்கப் பட்டிருக்கிறது
.

ஆம்
அந்த
ஒற்றைச் சொல்லைமட்டும்
உன்முன்
ஒலியைத் தீண்டவிடாமல்
என் நாவினுள்ளேயே
நான் பத்திரமாய்ப்
பூட்டிவைத்திருக்கிறேன்
.

எனக்குத் தெரியாததா…

மௌனமாகவே
என் வேர்களும் விழுதுகளும்
உன்னில் படர்ந்து
உன் நினைவுகளை
எனக்கெனவே
இன்னமும்
உறிஞ்சிக் கொண்டிருக்கும்
உண்மை
.

எனக்குக் கேட்காததா…

நீ
உன் அந்தரங்கத்துக்குள்
என்னை
இரகசியமாய் முத்தமிடும்
சப்தங்கள்

‘அன்புடன் இதயம்’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author