கவிதைகள்

திகைப்பு

திரையரங்கில் எல்லாரும்
திரையை மட்டும் பார்க்க,
நானோ உன்னை மட்டும்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்ன படம் பார்த்தாய்?
வினவிய தங்கைக்கு,
திடுக்கிட்டு
உன் பெயரைக் கூற
இருவருமே
திகைத்துப் போனோம்!

மனக்கடல்

அமைதியான ஏரியாய்
இருந்த என்மனம்
அலைகடலானது,
உன்னால்!

மழைக்காலம்

நீ
குடைபிடிக்கும்
தருணங்கள் எல்லாம்
எனக்கு
மழைக்காலம்தான்!

About The Author